Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 30 ஜூன், 2013

நமதூரில் நடைபெற்ற பெண்கள் கருத்தரங்கம்...


மேற்கு ஜமாத் மற்றும் நேசனல் விமென்ஸ் ஃப்ரண்ட் இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்காண விழிப்புணர்வு கறுத்தரங்கம் நேற்று 29.06.2013 மாலை 4 மணியளவில் மேற்கு ஜாமியா பள்ளி வாசல் கீழ் தளத்திள்

சனி, 29 ஜூன், 2013

குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித வாழ்வு உரிமைகள் கழகம் சார்பில் அடையாள உண்ணாவிரதம்

குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித வாழ்வு உரிமைகள் கழகம் சார்பில் அடையாள உண்ணாவிரதம்

மேற்கு காயிதே மில்லத் நகர் (ஆத்து ஓரம் ) பிரச்சனை சம்பந்தமாக இன்று காலை 10:00 மணியளவில் குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித வாழ்வு உரிமைகள் கழகம் சார்பில் அடையாள உண்ணாவிரதம் நடத்துவது குறித்து நமதூரில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ் மற்றும் போஸ்டர் இன்று காலை தான் மக்களின் பார்வைக்கு தெரிய வந்தது. இதனால் வெகுஜன மக்கள் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவது தெரிய வில்லை. 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.


வெள்ளி, 28 ஜூன், 2013

நமதூரில் இன்று அல்லாஹ்வின் ரஹ்மத் இரங்கியது...

இன்று அஸர் தொழுகையில் இருந்து கிட்டதட்ட ஒரு மணி நேரம் அல்லாஹ்வின் ரஹ்மத் (மழை) வெளுத்து வாங்கியது. அல்ஹம்துலில்லாஹ்.
இடியும் . பலத்த காற்றுடனும் மழை பெய்தமையால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



நமதூர் ஆத்துஓரம் பிரச்சனையும் ! மேற்கு ஜமாத் தலைவரின் வேண்டுகோளும்...!

நமதூர் ஆத்துஓரம் பிரச்சனையும் ! மேற்கு ஜமாத் தலைவரின் வேண்டுகோளும்...!
பழைய புகைப்படம்
இன்று வழக்கம் போல மேற்கு பள்ளியில் ஜிம்மா தொழுகை முடிந்த உடன் ஓர் அறிவிப்பு செய்யப்பட்டது. அது தான் கடந்த சில நாட்களாகவே நமதூரில் உள்ள ஆத்துயோரம் உள்ள பிரச்சனையை பற்றி சுன்னத்து தொழுகை முடிந்த உடன் பேசஉள்ளனர் என்பது தான் அந்த அறிவிப்பு. 

நமதூரில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

நமதூரில்  பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

வியாழன், 27 ஜூன், 2013

தந்திக்கு பதிலாக இ-போஸ்ட்டை பயன்படுத்துங்கள்: தபால் துறை!

ஜூலை மாதம் 15ம் தேதியுடன் தந்தி சேவை நிறுத்தப்படவிருப்பதால் மக்கள் இ-போஸ்ட் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு தபால் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தபால் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் மிகப் பழமையான தகவல் தொடர்பு சேவைகளுள் ஒன்றான தந்தி சேவை ஜூலை 15ம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளது. தந்தி சேவையைப் போன்றே இ-போஸ்ட் சேவையை இந்திய தபால்துறை வழங்குகிறது. இச்சேவையில், ஏ4 பக்க அளவிலான செய்திக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மின்னஞ்சலின் வேகத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்படுகிறது.

புதன், 26 ஜூன், 2013

ஜூன் - 26' - சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்!

விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் அதி உச்சத்திலிருக்கும் காலக்கட்டத்தில் நாம் வசித்து வருகிறோம். மனித உரிமைகள் பற்றியும் ஊடக சுதந்திரம் பற்றியும் மிக அதிகமாகவே பேசி வருகிறோம்.
ஆனால் நாகரீகமடைந்த சில மனித மனங்கள் மிருகங்களை விட மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது என்பதற்கு நாம் வாழும் உலகிலேயே பல நிதர்சனங்களை சந்தித்து வருகிறோம்.

திங்கள், 24 ஜூன், 2013

துபாயில் குர்ஆனை விவரிக்கும் பூங்கா விரைவில் திறக்கப்படும்!

துபாய் அரசு தனது நீண்ட நாள் லட்சியமான குர்ஆனின் காட்சிகளை விவரிக்கும் பூங்கா ஒன்றினை அமைக்கும் எண்ணத்தைச் செயல்படுத்தத் துவங்கியுள்ளது. 7.3 மில்லியன் டாலர் திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படும் இந்தப் பூங்காவில் உள்ள தோட்டத்தில், குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இயற்கைத் தாவரங்கள் அனைத்தும் வளர்க்கப்படும்.

பராத் இரவும் பூந்தியும்

பராத் இரவும் பூந்தியும்

இன்று இரவு நமதூரில் சபே பராத் இரவாக சுன்னத்துவல் ஜமாத் சார்பாக கொண்டாப்படுகிறது. அதை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாகவே பூந்தி

வியாழன், 20 ஜூன், 2013

நமதூர் ஆத்துஓரம் பிரச்சனையும் திமுக வின் நிலை பாடும்

நமதூரில் இன்று காலை 11.30 மணியளவில் குன்னம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் ( MLA ) S.S. சிவசங்கர் அவர்கள் வருகை புரிந்தார்கள்.

மரணம் எந்த நிமிடம் வேண்டுமானாலும் சம்பவிக்கலாம் .....


அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...... 

மரணம் எந்த நிமிடம் வேண்டுமானாலும் சம்பவிக்கலாம் அதற்கு முன் நாம் நம்முடைய தீனை பற்றி சரியாக தெரிந்து கொள்ளவேண்டும் . அல்லாஹ் சொல்வதை படித்து பாருங்கள் " மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்." என்பதை அல்லாஹ் அத்தியாயம் - 103 , ஸூரத்துல் அஸ்ரி (காலம்) சூராவில் சொல்லி தெளிவையும் தருகிறான் - நம்மில் சிந்திப்பவர் உண்டோ ? 

ஏராளமான நன்மைகள் அடங்கிய குர்ஆனையும், ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறையையும் இன்று நாம் சரியான முறையில் தெரிந்து கொள்ளாததால், கற்றுக் கொள்ளாததால் அல்லது நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணரப்படாததால் சரியாக எந்த வழிமுறை உண்மையான நேரான வழிமுறை ? ஷிர்க் எது? ஏகத்துவம் எது? என அறியாமையில் விழி பிதுங்கி கருத்து வேறுபாடுகளோடு தீன் கல்வியை பின்னுக்கு தள்ளி காலத்தை விரயமாக்கி வருகிறோம் என்பதே நிதர்சனமானது . நமது இஸ்லாமிய மார்கத்தின் அடிப்படை விஷயங்களில் நாம் சந்தேகத்துடன் வாழ முடியுமா? நிச்சயமாக முடியாது சகோதரர்களே !

பராஅத்தும் மத்ஹபுகளும்...

அஸ்ஸலாமு அல்லைக்கும் 
பிஸ்மில்லாஹ் ...
        நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.

புதன், 19 ஜூன், 2013

அ.தி.மு.க வலியில்லாமல் தி.மு.க வின் வலியில் ம.ம.க


மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்திருப்பது மிக மிக சாணக்கியத்தனம் நிறைந்த முடிவாகும். தமிழக அரசியலின் திசை வழிப் போக்கை அறிந்தவர்கள், ம.ம.க.வின் இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் மதிநுட்பத்தை புரிந்து கொள்வர்.

வளர் பிறை - 2

முஸ்தஃபா கொஞ்சம் கொஞ்சமாக குடும்பச் சூழ்நிலையையும், தனது பொறுப்பையும் அந்தச் சிறு வயதிலேயே உணர ஆரம்பித்தான்.
ஹாஜராம்மா வீட்டிலேயே காலையில் இட்லி, மாலையில் பலகாரம் போன்றவை தயார் செய்து கொடுப்பார். முஸ்தஃபா அதை தெருவில் விற்பனை செய்து வருவதும், விடுமுறை நாட்களில் ஊரில் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலை பார்ப்பவர்களுக்கு உதவியாகவும் சென்று வருவான். இப்படியே 12ம் வகுப்பும் முடிந்தது.

செவ்வாய், 18 ஜூன், 2013

இன்று நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத் இரங்கியது

இன்று நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத் இரங்கியது


இன்று 18.06.2013 மாலை 5.30 மணியலவில் நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத் இரங்கியது. கிட்ட தட்ட 1 மணி நேரம் மழை நீடித்தது.

நமதூரில் வாடகை வீடா .....?

வீட்டு வாடகை

ஊரு கட்டுப்பாடு அதன்மூலம் ஒற்றுமையின் வெளிபாடு இவை அனைத்தும் காற்று பிடிங்கிய  பந்துபோல சுருங்கி கொண்டு வருகிறதை இன்றைய சூழ்நிலை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.

குமுறி எறியும் எரிமலையின் மீது எரிகர்க்களை வீசுவது போல வீடு இழப்பவர்களுக்கு

இனிப்பு பலன் வெருப்பு

இனிப்பு பலன் வெருப்பு

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள்நிச்சயமாகப் போகும்ஆகசட்டைஅழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் 

ஞாயிறு, 16 ஜூன், 2013

அபாய நோட்டீஸ்

கால அவகாச நோட்டீஸ்

நமதூரில் கடந்த ஒரு வார காலமாக ஆற்றங்கரை ஆக்கிரமித்ததாக கருதப்படும் பகுதிகளை அகற்றுவதற்கு உண்டான வேளைகளில் இரங்கியுள்ளது இன்றய தமிழக அரசு.

ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பபு பகுதிகளை அகற்றுவதற்காக கடந்த

அபூபக்கரின் அறுதி நிலைப்பாடு!

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவு முஸ்லிம்களின் மனங்களில் சில கணங்கள் வெறுமையை ஏற்படுத்தியது. எனினும் சிறிதும் தாமதிக்காமல் அதிலிருந்தும் விடுபட்ட முஸ்லிம்கள் தங்களை வழிநடத்திச் செல்ல புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இறைத்தூதரின் மறைவுக்குப் பின்னால் முஸ்லிம்கள் பலவீனமாகிவிடுவார்கள் என்று காத்திருந்த சிலர் தருணம் பார்த்து சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு,அரசு உதவிப்பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர்,இஸ்லாமியர்,புத்த மதத்தினர் சீக்கியர் மற்றும்

சனி, 15 ஜூன், 2013

நமதூரில் மழைச்சாரல்

நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கி கொண்டுள்ளது.
நமதூரில் 15.06.2013 அன்று இரவு அல்லாஹ்வின் ரஹ்மத் சாலை நனையும் அளவிற்கு தூரல் தூவிக்கொண்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்...

15 ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா....

ஜிம்மா சிந்தனை....

ஜிம்மா சிந்தனை....

நமதூரில் உள்ள மேற்கு ஜாமியா பள்ளிவாசலில் கண்ட ஹதீஸ் தொகுப்புகள்...


இஸ்லாமிய திருமணங்களுக்கு பள்ளிவாசல் பதிவை அரசு ஏற்கவேண்டும் உலமா சபை கோரிக்கை!

கட்டாய திருமணப்பதிவு சட்டத்திலிருந்து இஸ்லாமியர்களுக்கு விலக்களித்து பள்ளிவாசல்களில் செய்யும் பதிவையே அரசு பதிவாக ஏற்க தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சபையின் மாவட்ட தலைவர் சய்யித் அஹ்மத், செயலாளர் அய்யூப்கான், பொருளாளர் ரசூல்முகைதீன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ சுரேஷ்குமாரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தூக்ககோளாறு நோயினால் சாலை விபத்து...

இருபது விழுக்காடு சாலை விபத்துக்கள் தூக்கமின்மையினால் ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வு கூறுகிறது.
அமெரிக்கன் தோராசிக் சொசைட்டி, சொந்த வாகனம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில் நீண்ட தூரம் ஒரேமாதிரியான சாலையில் பயணிக்கும் ஓட்டுனருக்கு நாளடைவில் ஓ.எஸ்.எ எனப்படும் தூக்க குறைபாடு நோய்குறியீடு ஏற்படுவதாகவும் இதனால் ஓட்டுனருக்கு

160 ஆண்டுகால பாரம்பரியமிக்க தந்தி சேவைக்கு சோக முடிவு!

ஒரு காலத்தில் மகிழ்ச்சியான, சோகமான, அவசர செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த 160 ஆண்டுகால பாரம்பரியமிக்க தந்தி சேவையை நிறுத்த பி.எஸ்.என்.எல் முடிவுச்செய்துள்ளது.
தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த “தந்தி’ (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தொலைபேசி, செல்பேசி (எஸ்.எம்.எஸ்.), கம்ப்யூட்டர் (இ-மெயில்), “ஸ்மார்ட் ஃபோன்’ என தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நிகழ்ந்து வரும் அபார வளர்ச்சி, 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவைக்கு மூடு விழா காண வைத்துள்ளது.

வெள்ளி, 14 ஜூன், 2013

தினசரி நாளிதலில் கால் பதிக்கும் இஸ்லாமிய வரலாறு.....

பாலைவன சிங்கம் உமர் முக்தார்...

இயற்கையில் உமர் முக்தார் ‘மதரஸா‘வில் குர்ஆன் போதிக்கும் ஆசான். ஆனால் யுத்த களத்தில் மிகச்சிறந்த கொரில்லா போர் தந்திரங்களை கையாண்டவர். போர் தந்திரம் மற்றும் தாக்குதலின் மூலம் பல நேரங்களில் இத்தாலிய படையை நிலைகுலைய செய்திருக்கிறார். 20 வருடங்களாக இத்தாலிக்கு எதிராக உமர் முக்தார் மேற்கொண்ட கொரில்லா யுத்த முறையையும் லிபியாவின் அன்றைய கால அரசியலையும் மையமாகக் கொண்டு நாவல் வடிவில் இப்புத்தகம் படைக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவி தொகை பெற பாப்புலர் ஃப்ரணட்டின் முகாம்...


வியாழன், 13 ஜூன், 2013

நமதூரில் கல்வி உதவித் தொகை பெற TNTJ வின் சேவை....

தமிழக அரசு சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள்;, புத்தமதத்தினர்) மாணவ, மாணவியர்களுக்கு 2013 - 2014 ஆம் ஆண்டிற்கான  கல்வி உதவித் தொகையை அரசு அறிவித்துள்ளது.

1. இதில் மாணவியர்களுக்கு 30% இட ஒதுக்கீடு
2. இதில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் மற்றும் ITI, DIPLOMA, DIPLOMA IN NURSING, ITC, NCVT, 12TH VOCATIONAL GROUP, UG, PG, M.PHIL, PH.D, MBBS, BE, ME, B.TECH, ARCHITECTURE, BL  மற்றும் ஆசிரியர் பயிற்சி என்று எல்லா துறை மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அத்வானிக்கும், மோடிக்கும் என்ன வித்தியாசம்?

பிரதமர் வேட்பாளருக்கான பதவி நரேந்திரமோடிக்கே அளிக்கப்படும் என்பது கடந்த மார்ச் மாதம் நடந்த பா.ஜ.கவின் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் கிட்டத்தட்ட உறுதிச்செய்யப்பட்டது. கோவாவில் நேற்று முடிவடைந்த பா.ஜ.கவின் 2 தினங்கள் கொண்ட தேசிய செயற்குழு கூட்டத்தின் இறுதியில் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரச்சாரக்குழுவின் தலைவராக மோடி இருப்பார் என்று அறிவித்ததோடு  ஊடகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

புதன், 12 ஜூன், 2013

குழந்தைகள் பாட்டு!

லெப்பைக்குடிக்காடு குழந்தை பாட்டு! அதுவே நாளைய தலைமுறைக்கு அறிவின் ஊற்று 


குழந்தைகளுக்கு பள்ளி திறந்ததை முன்னிட்டு நமது அறிவுக்கு எட்டியவண்ணம் குழந்தைகளுக்காக ஒரு சிறிய பாடல்.

அம்மாவை போல அன்பாய் பழகு.
அத்தாவை போல அறம் செய்து உண்.

தாதா அத்தாவை போல தைரியமாக வாழ்.
தாதி அம்மாவை போல தன்மானத்தோடு இரு

நண்ணி அத்தாவை போல நற்பெயர் எடுத்திடு.
நண்ணி அம்மாவை போல நன்மை செய்திடு.

அமீரகத்தின் அரசு பதவியில் வேலை வாய்ப்பு

அமீரகத்தின் அரசு பதவியில் வேலை வாய்ப்பு

மின் அஞ்சல் 
HABEEB MOHAMED
&
Basha Haja Mohideen

திங்கள், 10 ஜூன், 2013

கல்யாணம் பண்ண போறீங்களா?

பணம்
பணத்துக்காக ஒரு பெண்ணை அல்லது மாப்பிள்ளையை முடித்தால், பணம் கரையும் வரை மட்டுமே குடும்ப பந்தம் அமைதியாக இருக்கும். பணம் இல்லையெனில் தைரியமாக முரண்பாடுகள் பேசப்படும்.

வளர் பிறை – 1

வாழ்வில் வரும் கஷ்டங்களிலும் புன்னகைக்க பக்குவப்பட்ட மனிதர் காதர் பாய். அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் ஆயிஷா. அடுத்தவன் முஸ்தஃபா. இளையவள் சுமையா. அழகான குடும்பம். குறைந்த வருமானத்திலும் சிறப்பாக குடும்பத்தைக் கொண்டு செல்லும் அறிவான மனைவி ஹாஜரா. அழையா விருந்தாளியாக அடிக்கடி வந்து போகும் கடன் சுமை. இதுதான் அவரது உலகம்.
அவரைப் போலவே அவரின் மனைவி ஹாஜராவும், மூத்த மகள் ஆயிஷாவும் ஏழ்மை வாழ்க்கையைப் பொருந்திக் கொண்டதுதான் அவர்களின்  சிறப்பம்சம்.

ஞாயிறு, 9 ஜூன், 2013

துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு


 

பெரம்பலூர் அருகே துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துணை மின் நிலையம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பென்னக்கோணம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைத்திட வருவாய்த்துறையினர், மின்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கழனிவாசல் கிராம மக்கள் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று தங்கள் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் கலெக்டர்

தலைமுறையாய்த் தொடரும் துரோகங்கள்...

தனது தகப்பனை பற்றிய நினைவுகளில்
எனது தாத்தா சொன்னார்....
எங்கப்பன் ஒரு மாறுபாட்டுக்காரன்...துரோகி என்று.....

 எனது தாத்தாவை பற்றிய நினைவுகளில்

சனி, 8 ஜூன், 2013

அரை நூற்றாண்டுகளை கடந்த லெப்பைக்குடிக்காடு பொது நூலகம்

அரை நூற்றாண்டுகளை கடந்த லெப்பைக்குடிக்காடு பொது நூலகம்

அறிவுக் களஞ்சியமான பொது நூலகம் லெப்பைக்குடிக்காடு மாநகரில் 15.07.1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 06.09.1958 அன்று R.கல்யாணசுந்தரம்

நமதூரில் கடந்த மூன்று நாட்களாக மழை....


கடந்த மூன்று நாட்களாக நமதூரில் அல்லாவின் ரகமத் இறங்கி கொண்டு உள்ளது. காலை நேரத்தில் வெயிளின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை

மில்லத் கல்வி அறக்கட்டளையின் அறிவிப்பு...

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது நிருபர்

தாருஸ்ஸலாம் தவ்கீத் ஜமாத் பெண்கள் கல்லுரி ...

தாருஸ்ஸலாம் தவ்கீத் ஜமாத் பெண்கள் கல்லுரி 


நமது நிருபர்

புதன், 5 ஜூன், 2013

உழைப்பும் ,பிழைப்பும்.... சிந்தனைக்கு

ஒருவர் ஒரு காட்டுப்பாதையின் வழியாக பயணம் மேற்கொண்டார். அப்பாதையில் ஒரு கழுகு குறுகிப் போய் பரிதாபமாக உட்கார்ந்து இருந்தது. அம்மனிதர் அந்த கழுகின் நிலையைக் கண்டு மிகவும் அனுதாபப்பட்டார், பரிதாபப்பட்டார்... இந்த கழுகு எவ்வாறு தன் வாழ்வாதாரத்தை தேடிக் கொள்ளும் என தனக்குத்தானே எண்ணிக் கொண்டார்.
இவ்வாறு அவர் நினைத்துக் கொண்டிருக்கும் போதே மற்றொரு கழுகு அதனருகே வந்தது. தன் வாயில் இருந்த

செவ்வாய், 4 ஜூன், 2013

இஸ்லாமிய பெண் உரிமை



நேற்றைய செய்தி: ஜவுளி கடை பொம்மை பார்த்தல் காம சிந்தனை வருகிறது - ஹிந்து முன்னணியினர் முற்றுகை போராட்டம்

இன்றைய முக நூல் காவிகள் செய்தி: பெண்களை உடலை மறைக்க சொல்லி பெண்ணடிமைத்தனத்தை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்.என்று ஒரு பதிவு போட்டு தமிழகத்தில் வெளியான 10 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிப் பெற்று முதல் இடம் பிடித்த ஒரு

திங்கள், 3 ஜூன், 2013

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவி தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ,புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள்) மாணவ – மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. 2013-14ம் கல்வியாண்டிற்கு, புதிதாக உதவித்தொகை பெறவும் மற்றும் முந்தைய வருடம் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகையை புதுப்பிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :

1) 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு

சனி, 1 ஜூன், 2013

பத்தாம் வகுப்பு நமதூர் மாணவிகளின் சாதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 9.02 சதம் அதிகரித்துள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வை 9,275 மாணவ, மாணவிகள் எழுதினர்.