Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

சுப்பிரமிய சுவாமியின் தலைவலிக்கு யார் காரணம்?


சுப்பிரமிய சுவாமியின் தலைவலிக்கு யார் காரணம்?

பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் பெரும் தலைவலியாக இருப்பவர் தனது இருபதுகளில் இருக்கும் ஒரு இளைஞர். சுப்பிரமணிய சுவாமியின் பதிவுகளை கிண்டல் செய்யும் விதத்தில் பதிவுகளைப் போட்டு அசத்தி வரும் அவரின் “Unofficial: Subramaniam Swamy”  பக்கத்திற்கு கிட்டதட்ட
இரண்டு லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். பல முறை இவரது பக்கத்தை முடக்க சுப்பிரமணிய சுவாமி முயற்சி செய்தும் அவை பயனளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரின் அந்த முயற்சிகள் அவரது பக்கத்தையே ஃபேஸ்புக் முடக்க காரணமானது.
விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள் என உலகின் பிரபலங்கள் இந்து வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று சுவாமி பாணியில் கலாய்ப்பது, சுவாமியின் கருத்துகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பது, இன்னும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் மோடியின் கொள்கைகளை கேலி செய்வது முதலான பதிவுகளை அந்த இளைஞரின் பக்கத்தில் காணலாம்.. இதனால் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை விட பா.ஜ.க விற்கு இவர்தான் பெரிய சவாலாக மாறிவிட்டார்.
ஒரு செய்தி இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்து அவர் கூறியதாவது, சுப்பிரமணிய சுவாமியின் பதிவுகள் நகைப்புக்குரியதாகவும் அதே நேரம் ஆபத்தானவையாகவும் இருந்தது. அவை பகுத்தறிவுக்கு பொருந்தாமல் எரிச்சலூட்டுபவையாக இருந்தது. அதனால் அதே போன்று ஒரு பக்கத்தை ஃபேஸ்புக்கில் தொடங்க முடிவு செய்தேன், என்னுடைய முதல் பதிவுக்கு பெரும் வரவேற்ப்பு கிடைத்தது. அது என்னை மேலும் தொடர ஊக்கப்படுத்தியது. அதனால் தொடர்ந்து கேலி பதிவுகளையும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க, மற்றும் சுவாமியின் பதிவுகளுக்கு எதிர்பதிவுகளையும் பதிவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் தன்னை குறித்த தகவல்களை இரகசியமாக வைத்துகொள்ள அறிவுறித்திய அவர், தான் அந்த பக்கத்தை நடத்துவது தனது பெற்றோர்களுக்கும் கூட தெரியாது என்று கூறியுள்ளார். அவர்களுக்கு தெரிந்தால் என்னை அந்த பக்கத்தை முடக்க வைத்துவிடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் சுப்பிரமணிய சுவாமி கூறுவது போல் தான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்றும் அதனால் சுதந்திரமாக யாருடைய குறைகளை வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம் என்றும் கூறியுள்ளார்.
நம் நாடு பல்வேறு மதங்களை பின்பற்றக் கூடிய மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் ஒரு நாடு என்றும் சுவாமி போன்ற தலைவர்கள் இந்த ஒற்றுமையை குலைப்பதற்கு தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இவரது பக்கம் சமீபத்தில் ஃபேஸ்புக்கினால் முடக்கப்பட்டது. ஆனால் இதனை பலர் கண்டிக்கவே வேறு வழியின்றி ஃபேஸ்புக் அதனை மீண்டும் நிறுவியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக