Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

எது சிறந்த கல்வி?

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அறிவு. அறிவைத் தேடுவது, அறிவு ஞானத்தை வளர்ப்பது, அதனை அடுத்தவருக்கு எத்தி வைப்பது, அடுத்த தலைமுறைக்கு அதனைக் கொண்டு சேர்ப்பது போன்றவை மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள சிறப்பு.
அறிவைத் தேடுவதற்கு ஊக்குவிக்கும் ஒரு கிரந்தம்தான் திருக்குர்ஆன். சிந்தனைக்கும், ஆராய்ச்சிக்கும் அது தூண்டுகோலாக அமைகிறது.

எழுச்சியுடன் நடைபெற்ற அழகிய கடன் IAS நிகழ்ச்சி ...


நமதூர் M.G.M. மஹாலில் 27/09/2015 அன்று  "மில்லத் கல்வி அறக்கட்டளை" சார்பாக அழகிய கடன் I.A.S. மூலம் சென்னை மக்கா பள்ளி இமாம் சம்சுதீன்

நமதூரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கையெழுத்து இயக்கம் ...

மேற்கு பள்ளிவாசலில் முஸ்லீம் லீக்கிற்கு தடையா ?


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயர்குழு தீர்மானித்த படி மாஷா அல்லாஹ்  25.09.2015  அன்று  ஜூம்ஆ தொழுகைக்கு பின்

திங்கள், 28 செப்டம்பர், 2015

ரேடியோ ஸலாம் மாறுமா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் 106.5 அலைவரிசையில் ரேடியோ ஸலாம் என்ற தமிழ் FM வானொலி இயங்கி வருவது அமீரக தமிழ் மக்கள் அறிந்ததே.
BJP, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இன்னும் ஆளே இல்லாத இந்து இயக்கங்களின் செய்திகளை தவறாமல் சொல்லும் இதற்கு முஸ்லிம் இயக்கங்களின் எவ்வளவு பெரிய போராட்டங்களாக இருந்தாலும் கண்களுக்கு தெரியவில்லை என்பது ஆச்சரியமே.

ஹஜ்ஜில் மற்றவரை காப்பாற்றி தனது உயிர் ஈந்த மன்சூரி!


சவுதி அரேபியா மாகாணம் யான்பூவில் மெகானிகல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தவர் நியாசுல் ஹக் மன்சூரி. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு யான்பூவில் வசித்து வந்தவர். இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ஹஜ்ஜில் வரும் வெளிநாட்டவருக்கு

பர்ஜானா – சிறுகதை

பர்ஜானாவும், பாத்திமாவும் சிறு வயது முதல் தோழிகள். இப்போது வயது அறுபதிற்கும் மேலாகிவிட்டது. இன்றும் தங்களது நட்பை தொடருகிறார்கள். வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் நல்ல நட்பை பேணி வருகிறார்கள்.
பர்ஜானாவிற்கு இரண்டு பையன்கள். இரண்டு பேருமே வெளிநாட்டில் வேலை செய்து நல்ல நிலையில் இருப்பதால் அடிக்கடி வீட்டிற்கு வர முடியாவிட்டாலும் எப்போதாவது ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு மட்டும் தனது மனைவி, பிள்ளைகளுடன் வந்து தனது அம்மாவை பார்த்து செல்வார்கள்.

எண்ணப்பட வேண்டிய இந்து தேசியத்தின் இறுதி நாட்கள்!

பட்டேல்களின் விசித்திரமான இடஒதுக்கீடு கோரிக்கையும், போராட்டமும், அதை பின்நின்று இயக்கும் மோடியின் அரசால் இந்தியாவின் மதச்சார்பின்மையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை முழக்கமும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தேசத்தை சூழ்ந்திருக்கும் இந்த இடர்பாடுகளில் இருந்து அதை மீட்டெடுக்க வேண்டிய கடமை தேச நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு சாமானிய இந்தியனுக்கும் இருக்கிறது.

புதன், 23 செப்டம்பர், 2015

ராமகோபாலன் வகையறாகள் வரலாற்றை அறிந்துவிட்டு வாயை திறப்பது நல்லது...

நமதூரில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பரம் ...

மக்கா ஹஜ் பயணிகளுக்காக ஜித்தாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்ததான முகாம்

ஹஜ் செய்வதற்காக உலகம் முழுவதிலிருமிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகரத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக நேற்று (18-09-15 வெள்ளிக்கிழமை) ஜித்தாவிலுள்ள கிங் ஃபஹத் மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்த இந்த முகாமில் 165 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 129 பேரிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டது. 

முஹம்மது அஹமது ! (ஒரு பார்வை)

இன்றைக்கு முஹம்மது அஹமது விவகாரம் ,உலகமெங்கும் பேசப்படுகிறது .அமெரிக்காவில் தான் செய்த கடிகாரத்தினை ,தனக்கு படித்துக் தரும் ஆசிரியரிடம் காண்பிப்பதற்காக கொண்டுச் சென்றவனை ,வெடிகுண்டு கொண்டு வந்திருப்பான் என்கிற அனுமானத்தில் அவனைப் போலிசிடம் ஒப்படைத்தனர்.பிறகுதான் தெரிந்தது.அது குண்டு அல்ல ,கடிகாரம் என்பது .பின்னர் அஹமது விடுவிக்கப்பட்டான்.இவ்விவகாரம் வெளியானப் பிறகு ,ஒபாமா வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறார் அஹமதுவை.இப்படியாக லட்சக்கணக்கில் அஹமதுவிற்கு ஆதரவு குவிகிறது.சரி !சந்தோசம் மகிழ்ச்சி.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

மறுமையை நோக்கி ...

மக்கள் நல கூட்டமைப்பில் பிளவா?


ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 5 கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி

ஆயிஷா..!!(சிறுகதை)


கைப்பேசியில் அழைத்தது ஆயிஷாவுடைய மாமியார் தான்.அழைப்பை ஏற்பதற்கு முன் தன் கணவனை நோக்கிச் சொன்னாள்.
“ஏங்க !மாமிதாங்க போன் பண்ணுறாக…!!

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் -நஹ்யான

சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் கலாம் பதிப்பகத்தின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் ..... விரைவில்வருகிறது

உயிரூட்டப்பட்ட நீதிதேவதை!

தணலின் மீது விழுந்த தூறல் போல தாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம், ஆனால் கேட்பாரற்று அனாதைகளாகிவிட்டோம் எனும் வேதனை நெருப்பில் வெந்து கொண்டிருந்த கஷ்மீரத்து முஸ்லிம்கள் மனதில் ஒரு நம்பிக்கைச் சுடராக உன்னதமான தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதையும் நமது இராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ளதுதான் நமது கண்களை ஆனந்தத்தில் பனிக்கச் செய்கிறது.

பெரம்பலூர் மாவட்ட மறுமலர்ச்சி தமுமுக சார்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட மறுமலர்ச்சி தமுமுக சார்பாக பெரம்பலூர் மாவட்ட

திங்கள், 14 செப்டம்பர், 2015

அப்பாவி ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்-உள்துறை செயலாளருடன் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் சந்திப்பு


செப்டம்பர் 15 – அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் வாடும் முஸ்லிம் மற்றும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையில்

பெருகும் கல்வி வியாபாரம் ...

ஒரு சமுதாயம் எவ்வாறு உருவாகிறது? ஒரு நாடு எவ்வாறு உருவாக்கப்படுகிறது? ஒரு தேசத்தில் மக்களுடைய மன நிலை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? ஒரு வளர்கின்ற நாட்டில் புதிய தலைமுறைகளை எப்படி வளர்த்தெடுக்கப்படுடுகிறது? போன்றவைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் இன்று வளர்ந்த நாடுகள், வளர்கின்ற நாடுகள் என்று நாம் பெருமையாக பேசுகிற நாடுகள், கல்வியை முதன்மைப் படுத்தியதால்தான் வளர்ந்தன என்று சொல்வதற்க்கு பெரிய அளவில் அறிவோ, திறமையோ அவசியமில்லை.

முடியட்டும் விடியட்டும் குறும்படத்தில் நடிக்கும் மு.க.ஸ்டாலின்


தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சார யுத்திகளை கையாண்டு

ராஜஸ்தானில் பக்ரீத் விடுமுறை ரத்து : பாஜக அரசு உத்தரவால் சர்ச்சை!

ஜெய்ப்பூர்: பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்று ராஜஸ்தான் பா.ஜனதா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைப் பின்பற்றி சத்தீஸ்கர் மாநிலமும் ஜைன மதத்தின் பண்டிகையையொட்டி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இந்த சர்ச்சை நீடித்து கொண்டிருக்கும் போது இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்ற ராஜஸ்தான் அரசின் உத்தரவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துத்துவ ஆட்சியை முன்னோட்டம் விடும் ராஜஸ்தான் அரசு

இந்தியாவின் ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டனி கைப்பற்றியதில் இருந்து சிறுபான்மை மற்றும் தலித் மக்களை மிரட்டும் வகையில் தொடர்ந்து பல அறிக்கைகளை  அதன் அமைச்சர்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.மத்திய அமைச்சர்களின் வெறுப்பூட்டும் அறிக்கைகளை ஆளும் பாஜகவின் மாநில அரசாங்கங்கள் செயல்படுத்தி வருகிறது.

“இறைச்சி விற்பனை தடை” உத்தரவை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றம்!

மும்பை:   மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வரும் 17ம் தேதி இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மும்பை மாநகராட்சியால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை எதிர்த்து ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்த மனுவை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனுப் வி. மோத்தா, அஜ்மத் சயாத் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இறைச்சி விற்பனை உள்ளிட்டவற்றை 2 நாள்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக கடந்த 2004ம் ஆண்டே மகாராஷ்டிர அரசு விதிகளை கொண்டு வந்திருந்தாலும், அதை இதுவரை முழுமையாக செயல்படுத்தவில்லை. ஆனால், திடீரென அந்தத் தடையை 4 நாள்களாக நீடித்தது ஏன்?

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

சனி, 12 செப்டம்பர், 2015

மக்கா விபத்து 9 இந்தியர்கள் உட்பட 107 பேர் பலி , 230 பேர் படுகாயம் – உலகமே சோகத்தில் மூழ்கியது


மக்கா: முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவில் நேற்று பலத்த காற்றின் மூலம் ஏற்பட்ட விபத்தில் உலகம் முழுவதும் இருந்து ஹஜ்ஜிற்கு வந்திருந்த யாத்ரீகர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.

வியாழன், 10 செப்டம்பர், 2015

TNTJ மர்கஸ் கூட்டுக் குர்பானி திட்டம் ...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு கிளையின் சார்பாக நபிவழியில் கூட்டுக் குர்பானி திட்டம் 

நமதூரில் ஜமாத்துல் உலமா நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ...


நமது லப்பைக்குடிக்காடு நகர ஜமாஅத்துல் உலமா மாதம் ஒரு பயான் நமதூரில் ஏற்பாடு செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது...

கூட்டு குர்பானி திட்டம் - த.மு.முக


தொடா்புக்கு ..

புதன், 9 செப்டம்பர், 2015

அட்சேதின் ஔரங்கஸிப் ஆலம்கிரி..!!

இந்தியா மாறி கொண்டிருகிறது நாம் மாறவேண்டும், இன்னும் 2002குஜராத்தில் நடந்த விபத்தை மட்டுமே வைத்து 2015 மோடியின் இந்தியாவை மதிப்பிடுவது தவறு என்றும்,அவ்வாறு மதிப்பிட்டால்,தேசத்தின் மீதான உங்கள் மதிப்பு சந்தேகத்திற்கு உரியது என்றும் பரிவாரங்கள் புளுகத் தொடங்கிவிட்டன. இதன் விளைவாய் உங்கள் மீதான மதிப்பை மறுபரி பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தேசத்தை தள்ளுகிறீர்கள் என்று மாற்றத்திற்கான வரையரையும் தேசியத்திற்கு புதிய இலக்கணத்தையும் வகுத்து அக்ரஹாரத்து அம்பிகளும்,அதனை வழிமொழியும் மோடியின் தம்பிகளும் பிரமிப்பூட்டுகிறார்கள்.
மறுபுறம் இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களை குழிதோண்டி புதைக்கும் துவேஷ கருத்துக்கள்,பணவீக்கம் ,பொருளாதார மந்தநிலை , ஊழல்,வெளிப்படையற்ற அரசு நிர்வாகம்,பங்குசந்தை வீழ்ச்சி,விலைவாசி உயர்வு, கடமை தவறும் நீதித்துறை, உளவு துறையின் உளறல்களை ஊர்பரப்பும் ஊடகங்கள் என அனைத்து துறைகளிலும் கடும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது இந்தியா.

என்னை மதசார்பற்றவன் என்று உங்களை எது எண்ண வைத்தாலும், தெரிந்துகொள்ளுங்கள்… நான் ஒரு இந்து! திரிபுரா மாநில ஆளுநர் டதகட்ட ராய்

திரிபுரா  : திரிபுரா மாநில ஆளுநர் டதகட்ட ராய், ”தான் ஒரு மதசார்பற்றவன் இல்லை, ஒரு இந்து” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அருண் நம்பியார் என்ற நபரின் தற்போதைய இந்தியாவின் பாசிச அரசுக்கு எதிரான போராட்டம் என்ற பதிவுக்கு பதில் கூறும் விதமாக டதகட்ட ராய் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.
என் தேசம் ஒரு மதசார்பற்ற தேசமாக இருந்தாலும், நான் ஒரு இந்து என்று பதிவு செய்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த திரிபுரா மாநில CPM கட்சியின் பொதுச் செயலாளர்

மனசாச்சி ...


2002 குஜராத் வன்முறையை நேரில் கண்டவர் நீதியரசர் ஹிமான்ஷு திரிவேதி. ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமான லாண்டிரியை கலவரக்காரர்கள்

வியாழன், 3 செப்டம்பர், 2015

புதன், 2 செப்டம்பர், 2015

ஆம். நம்பிக்கை தேய்ந்து தான் விடும். நீதித்துறை மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை!..

“முன்று மணி நேரம் தலையை மறைக்கவில்லை என்றால் உங்கள் இறை நம்பிக்கை ஒன்றும் தேய்ந்து விடாது.”
“தலையை மறைக்காமல் தேர்வு எழுத முடியாது என்பது உங்கள் அகங்காரத்தின் வெளிப்பாடு.”
“இது சிறுபிள்ளைத் தனமான செயல்”

மேலே உள்ள வார்த்தைகள் பாஜக எம்பி சாக்ஷியால் சொல்லப்பட்டதல்ல..சிவசேனாவின் சாம்னா தலையங்கத்திலும் வெளி வந்ததல்ல. ஆர்எஸ்எஸ்

தடை செய் ! அல்லது கொலை செய் !! – எழுச்சி பெரும் இந்துத்துவ தீவிரவாதம்

மூத்த கன்னட எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக்கொலை” என்ற செய்தி, நமது அரசியலமைப்பு சட்டத்தின் நெடுந்தூண்ட்களில் ஒன்றான கருத்து சுதந்திரம் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்டது என்பதையே உணர்த்துகிறது.

மதத்தின் பெயரால் அப்துல் கலாமிற்கு அவப்பெயர் உண்டாக்காதீர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு கம்யூனிஸ்ட்டுகள் வேண்டுகோள்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரில் சர்ச்சையை ஏற் படுத்த வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.