
76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிச் சலுகையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதால் உயிர் காக்கும் மருந்துகளின் விலை பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஹீமோஃபீலியா (Haemophilia) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்படுவர் எனத் தெரிகிறது.