Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

மத்திய அரசின் முடிவால் 76 வகையான உயிர் காக்கும் மருந்துகள் விலை உயரும் அபாயம்

பெங்களூருவில் உள்ள பயோகான் மருந்து தயாரிப்பு நிறுவனம் | படம்: ராய்ட்டர்ஸ்.


76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிச் சலுகையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதால் உயிர் காக்கும் மருந்துகளின் விலை பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஹீமோஃபீலியா (Haemophilia) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்படுவர் எனத் தெரிகிறது.

ஹீமோஃபீலியா என்பது ஒரு மரபணு நோய். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படும். அவற்றை கட்டுப்படுத்த இரண்டு முக்கிய மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டுமே இறக்குமதி செய்யப்படும் மருந்துகள். இந்நிலையில், மத்திய அரசு இறக்குமதி வரிச் சலுகையை ரத்து செய்தால் மருந்துகளின் விலை பல மடங்கு அதிகரிக்கும் என நோயாளிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஹீமோஃபீலியா சொசைட்டியைச் சேர்ந்த ரூபால் பஞ்சால் கூறும்போது, "ஓராண்டுக்கு எங்களுக்கு 1,500 முதல் 1,7000 யூனிட் மருந்து தேவைப்படுகிறது. இப்போதே நாங்கள் இந்த மருந்துகளுக்காக ரூ.30,000 செலவழிக்கிறோம். இந்நிலையில், மத்திய அரசு இறக்குமதி வரிச் சலுகையை ரத்து செய்தால் இந்த மருந்தின் ஒவ்வொரு யூனிட்டுக்கும் கூடுதலாக ரூ.4 வரை செலுத்த வேண்டியிருக்கும். இதனால் மொத்தமாக 1500 யூனிட் மருந்துகள் வாங்கும்போது பல ஆயிரம் ரூபாய் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்" என்றார்.
அதேவேளையில் ஹெச்.ஐ.வி, புற்றுநோய் போன்ற மருந்துகள் இந்தியாவிலும் தயாரிக்கப்படுவதால் இந்நோய்களுக்கான வெளிநாட்டு மருந்து மீதான வரிச் சலுகை ரத்து நோயாளிகளை பெருமளவில் பாதிக்காது எனக் கூறப்படுகிறது.
76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிச் சலுகையை ரத்து செய்வது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி 28-ம் தேதியே வெளியிட்டிருக்கிறது. ஆனால், பயோகான் மருந்து நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா தனது ட்விட்டரில், "இறக்குமது வரிச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட நோயாளிகளுக்கான உயிர்காக்கும் மருந்து 22% அதிகரிக்கக்கூடும்" என பதிவு செய்த பிறகே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நன்றி தமிழ் இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக