Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 4 பிப்ரவரி, 2016

சிறுபான்மையர் பள்ளிகளை அடையாளப்படுத்தும் முயற்சி! – அ.மார்க்ஸ்


சிறுபான்மையர் பள்ளிகளை அடையாளப்படுத்தும் முயற்சி! – அ.மார்க்ஸ்

இந்தியாவிற்குள் தீவிரவாதம் உருவாவதையும், உலக அளவில் IS தீவிரவாதம் பரவுவதையும் தடுப்பது என்கிற பெயரில் மகராஷ்டிர சங்கப் பரிவார அரசு சில திட்டங்களை அறிவித்துள்ளது.
சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் “வ்யாயம் ஷாலா”க்களைத் திறப்பது, எல்லா மதப் பாடங்களையும் சிறுபான்மையோர் கல்வி நிலையங்களில் கட்டாயமாக்குவது,
ஜநநாயகத்தின் சிறப்பையும் சர்வாதிகாரத்தின் குறைபாடுகளையும் உருதுப் பள்ளிகளில் பாடமாக்குவது, NCC, பாரத் வழிகாட்டி முதலியவற்றை உருதுப் பள்ளிகளில் கட்டாயமாக்குவது முதலியன இந்தத்திட்டங்களில் சில.
சிறுபான்மையர் பள்ளிகள் குறிப்பாக உருதுப் பள்ளிகளை அடையாளப்படுத்தி இவ்வாறு அறிவித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒருவேளை அனைத்துப் பள்ளிகளிலும் இதை எல்லாம் கட்டாயமாக்குகிறார்கள் என்றால் கூட சரி ஏதோ பொதுவாகச் செய்கின்றனர் எனச் சொல்லலாம் (அப்போது கூட இதை எல்லாம் கட்டாயமாக்குவது என்பது விவாதத்துக்குரியது என்பது வேறு விஷயம்).
இப்படிச் சிறுபான்மையர் பள்ளிகளையும் உருதுப் பள்ளிகளையும் இப்படித் தனிமைப் படுத்திச் செய்வதென்றால் அவை தீவிரவாதிகள் உருவாகும் களமாகவும் மதச் சர்வாதிகாரத்தை உயர் மதிப்பீடாக உருவாக்கும் இடமாகவும், ஜனந்நாயக எதிர்ப்புணர்வைப் போதிப்பதாகவும் உள்ளதாக ஒரு செய்தியை மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சிதான் இது. ஏதோ ஆயிரக் கண்க்கில் IS தீவிரவாதிகள் சிறுபான்மையர் பள்ளிகளிலிருந்து உருவாகிறார்கள் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும் முயற்சியும் கூட இது.
மிகப் பெரிய அளவில் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பள்ளிகளையும் நடத்துகிறது. அங்கு முழுக்க முழுக்க க்சிருபான்மை மக்கள் மீது வெறுப்பு போதிக்கப்படுகிறது. கம்பு கத்திவைத்துக் கொண்டு ஆங்காங்கு இராணுவப் பயிற்சிகள் நடக்கின்றான. இராணுவப் பள்ளி என்கிற பெயரில் வெடி மருந்துத் தொழிற்சாலைகள் நடக்கின்றன. இங்கெல்லாம் எந்த நடவடிக்கையையும் எடுக்காத பரிவார அரசுகள் இன்று இப்படி ஒரு செயல்பாட்டில் இறங்கி உள்ளதை மதச்சார்பில் அக்கறை உள்ள அனைவரும் கண்டிக்க வேண்டும்.
பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகள் ஜிஹாதிக் கருத்துக்களைப்பரப்புவதற்கு எதிராக மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற மத்திய அரசு வழிகாட்டலில் இது மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக