Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

எலிகள் கடித்து பச்சிளம் குழந்தை பலி – தொடரும் அரசு மருத்துவமனைகளின் அவலம்

ஆந்திரா: குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட குழந்தையை எலிகள் கடித்து தின்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விஜயவாடா, கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்த நாகா – லட்சுமி தம்பதிக்கு கடந்த 17-ம் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் 2வது ஆண் குழந்தை பிறந்தது.

பிறந்தது முதல், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த வாரம் குண்டூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன், குழந்தையை எலிகள் கடித்துள்ளன. இந்நிலை யில் செவ்வாய்க்கிழமை இரவு, எலிகள் குழந்தையின் இடது கண், கன்னம், கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் கடித்ததால் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை இறந்தது.
இதற்கு முன்பு தமிழகத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. என்று மாறுமோ அரசின் இந்த அவல நிலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக