Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

படேல்களின் போராட்டம் உள்நோக்கமுடையது! தலித் தலைவர்கள் எதிர்ப்பு!..

படேல் சமூகத்தை ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரி நடைபெறும் போரட்ட தருணத்தின் பின்னணியில் பல்வேறு உள் அர்த்தம் இருப்பதாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனுக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் படேல் சமூகத்தினர் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் தலைவர்கள் பலர் இந்த போராட்டத்தை வன்மையாக கண்டிக்கின்றனனர்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் ஹனுமந்த ராவ் கூறும்போது, “இடஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்கான சதி முயற்சியே இது. தங்களை எல்லாவிதத்திலும் முன்னேறிய சமூகமாகவே அடையாளம் காட்டிக் கொள்ளும் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்பதன் காரணம் என்ன?
தங்கள் சமூகத்தை ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரி நடைபெறும் போரட்ட தருணத்தின் பின்னணியில் பல்வேறு உள் அர்த்தம் இருக்கிறது. இவர்களைப் பார்த்து நாளை தெலங்கானா ரெட்டி சமூகத்தினரும், ஆந்திராவின் கம்மம் சமூகத்தினரும் இடஒதுக்கீடு கோரலாம். ஏன் பிராமணர்கள் கூட இடஒதுக்கீடு கோரும் நிலை உருவாகலாம்” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “இடஒதுக்கீட்டு பயன்களை ஓ.பி.சி. பிரிவினர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், கிரீமி லேயர் என்ற வருமானத்தின் அடிப்படையிலான தனியான தரம் பிரிப்புக்கான எல்லையை இன்னும் நீட்டிக்க வேண்டும்.
பல்வேறு அரசு வேலைகளில் ஓபிசி இடஒதுக்கீடு இன்னும் பெரும்பாலான இடங்களில் 8 முதல் 9% ஆகவே மட்டும் உள்ளது. எனவே இத்தகைய நிலையில் இடஒதுக்கீட்டை பங்குபோட்டுக்கொள்ளும் வகையில் படேல் சமூகத்தினரும் இணைய விரும்புவதை நாங்கள் வரவேற்கவில்லை” என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி, “குஜராத்தில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டம் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. படேல் சமூகத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஹர்திக் படேல், அவருடைய போராட்டம் குஜராத்தை மட்டுமே உள்ளடக்கியது என்றால் குஜராத்தி மொழியில் அல்லவா பேசியிருக்க வேண்டும். ஏன் போராட்டக் களத்தில் நின்று கொண்டு இந்தியில் பேசினார். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது” எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக