Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ஊடகங்களை மிரட்டும் மத்திய அரசு – யாக்கூப் மேமன் விவகாரத்தில் புதிய சர்ச்சை .!!

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட செய்தியை சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டதாகக் கூறி 3 செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியதற்கு இந்திய பத்திரிகையாளர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
யாகூப் தூக்கிலிடப்பட்ட பிறகு, மும்பை நிழல் உலக தாதா சோட்டா ஷகீலிடம் 2 செய்தி சேனல்கள் தொலைபேசியில் பேட்டி எடுத்து ஒளிபரப்பின. இதேபோல் மற்றொரு செய்தி சேனல், யாகூப் மேமனின் வழக்கறிஞரிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பியது.

இந்த 3 சேனல்களும் யாகூப் தூக்கிலிடப்பட்ட செய்தியை சரியாக கையாளவில்லை என்றும் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலும், உள்நோக்கத்துடன் நீதித் துறைக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் செய்தி ஒளிபரப்பியதாக 3 சேனல்கள் மீதும் மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது.
இதையடுத்து, “தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கேட்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீஸை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தை ‘எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா’ கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “கேபிள் டிவி கட்டுபாட்டு விதிமுறைகளின் கீழ் ஆஜ்தக், ஏபிபி நியூஸ், என்.டி.டிவி ஆகிய சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
அந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் பொதுநலன் மற்றும் பொது ஆர்வம் குறித்த சுதந்திரமான விவாதங்களுக்கு எதிராக எதுவும் இல்லை. அதாவது, அரசுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத உள்ளடக்கங்கள் இருந்தாலும் கூட கட்டுப்பாட்டு விதிமுறைகளில் இத்தகைய நோட்டீஸ் அனுப்பப்படுவதற்கான காரணிகள் இல்லை.
குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முன்வந்த யாகூப் மேமன் விவகாரம் அதனையடுத்து தூக்கிலிடப்பட்ட விவகாரம் பரந்துபட்ட பொது ஆர்வத்தையும், பலதரப்பட்ட கருத்துகளையும் வெளிக்கொணர்ந்துள்ளது.
இந்த விவாதங்கள் அரசியல் பேச்சு அல்லது உரை என்ற அளவிலேயே உள்ளது. எனவே இந்த பேச்சுரிமை கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்பட வேண்டும்.
அரசால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகள் வன்முறையைத் தூண்டுகிறது என்றோ, துவேஷத்தை பரப்புகிறது என்றோ தண்டனைக்குரியதாக்கப்பட முடியாதது.
எனவே, இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டமைப்பு, சேனல்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக