Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 14 நவம்பர், 2014

நிமோனியா நோயால் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் மரணம்!

இந்தியாவில் நிமோனியா நோயினால் ஒரு ஆண்டுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
உலக நிமோனியா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது, இதையொட்டி பிரபல குழந்தைகள் நல மருத்துவர் குழும மாநில தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் தெரிவித்ததாவது:
“நிமோனியா என்பது நுரையீரலை நுண்கிருமிகள் தாக்குவதினால் ஏற்படும் நோய் ஆகும். பொதுவாக இந்த நோய் அதிகமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அதிகமாக தாக்குகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

குழந்தைகளால் சாதாரணமாக இது போன்ற அறிகுறிகளை பெற்றோர்களிடம் கூற முடிவதில்லை. மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவை 2 அல்லது 3 நாட்களில் குணமடைய வேண்டும்.அதற்கு மாறாக 3–வது நாட்களுக்கு மேலும் காய்ச்சல் அதிமாக இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

சாதாரண நுண் கிருமிகளின் தொற்றினால் ஏற்படும் இந்த நோயினால் ஆண்டிற்கு இந்தியாவில் 4½ கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதில் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர்.
இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் இந்த நோயின் தாக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள மேம்பட்ட மருத்துவ வசதிகளும், அரசு மேற்கொள்ளும் உடனடி நடவடிக்கைகளுமே காரணம். மதுரையில் இந்த நோயினால் நாள் ஒன்றுக்கு 2 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.

இந்த நோயை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதற்கான சரியான சிகிச்சைகள் அளிக்கும் பட்சத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. கவனிக்காமல் விட்டால் இது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக