Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 1 நவம்பர், 2014

மாணவனின் கன்னத்தை கிள்ளி தண்டித்த ஆசிரியைக்கு 50 ஆயிரம் அபராதம்!

மாணவனின் கன்னத்தைக் கிள்ளி தண்டித்த ஆசிரியைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயின்று வந்த மாணவன் ஒருவனின் கன்னத்தை, அவனது வகுப்பு ஆசிரியை மெஹருன்னிசா பலமாக கிள்ளி தண்டித்துள்ளார்.
இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட்டதில், மாணவனுக்கு ரூ.1,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து ராம்கௌரி, தனது மகனின் மாற்று சான்றிதழை தருமாறு கேட்டு பள்ளி நிர்வாகத்தை அணுகினார். ஆனால் மாற்று சான்றிதழை கொடுக்காமல், பள்ளி நிர்வாகம் அவரை அலைகழித்தது. இதனிடையே மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் திருப்தி அடையாத ராம்கௌரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் ராம்கௌரிக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் ராம்கௌரி. அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் மற்றும் நீதிபதி சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவனைத் துன்புறுத்திய ஆசிரியருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர். அதே சமயம் ஆசிரியை மீதுள்ள குற்றவியல் வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள பெற்றோர் முன்வர வேண்டும் என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக