Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 19 நவம்பர், 2014

வி.களத்தூர் தமுமுக வின் மாபெரும் சமூக எழுச்சி பொதுக்கூட்டம்....

வி.களத்தூர் தமுமுக வின் மாபெரும் சமூக எழுச்சி பொதுக்கூட்டம்....

                      அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அன்போடு அழைக்கின்றோம்..

இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு 23.11.2014 அன்று மாலை 6.00 மணியளவில் வி.களத்தூர் கலிபா உமர் (ரலி) திடலில் (நடுத் தெரு) தமுமுக வின் மாபெரும் சமூக எழுச்சி பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கு உங்கள் அனைவர்களையும் வி.களத்தூர் தமுமுக சார்பாக அன்போடு அழைக்கிறார்கள்.

இந்த சமூக எழுச்சி பொதுக்கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவர் பேராசியர் M.H. ஜவாஹிருல்லா எம்.எல்.எ. அவர்களும், தமுமுக வின் மாநில கழக பேச்சாளர் திருச்சி ரபீக் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

தமுமுக வின் செயற்குழு உறுப்பினர் A. சாதிக் பாஷா அவர்கள் கிராஅத் ஓதி துவக்க உள்ளார். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A. ஜமீர் பாஷா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். இந்த சமூக எழுச்சி பொதுக்கூட்டமானது தமுமுக வின் நகரத் தலைவர் M. ஜமீல் பாஷா அவர்கள் தலைமையில் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு தமுமுக பெரம்பலூர் மாவட்ட தலைவர் K.A. மீரான் மொய்தீன், மாவட்ட செயலாளர் M. ரஷீத் அஹமத், மமக வின் மாவட்ட செயலாளர் M, சுல்தான் மொய்தீன், தமுமுக மாவட்ட பொருளாளர் M. முஹம்மது இலியாஸ், தமுமுக மாவட்ட செய்தி தொடர்பாளர் A. ஹயாத் பாஷா, வி.களத்தூர் ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாக செயலாளர் V.A. பஷீர் அஹமது, மில்லத் நகர் ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாக செயலாளர் V.A. அப்துல் சுபஹான், வி. களத்தூர் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் A. முஹம்மது இஸ்மாயில், தமுமுக மாவட்ட மாணவரணி து. செயலாளர்  M. கலீலுர் ரஹ்மான், தமுமுக ஒன்றிய பொருளாளர் A. சாதிக் பாஷா, தமுமுக நகர து.தலைவர் B. சாகுல் ஹமீது, தமுமுக நகர செயற்குழு உறுப்பினர் T.R.M சபியுல்லாஹ், தமுமுக நகர செயற்குழு உறுப்பினர் A. முஹம்மது ரபீக், தமுமுக முன்னாள் நகரத் தலைவர்  S. நூர் முஹம்மது,  தமுமுக நகர செய்குழு உறுப்பினர் G. சையது அலி, தமுமுக நகர பொருளாளர் B. சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளளனர்.

இறுதியாக தமுமுகவின் மில்லத் நகர் பொருப்பாளர் K. முஹம்மது இத்ரீஸ் நன்றியுரையாற்ற உள்ளார்.

இந்த மாபெரும் சமூக எழுச்சி பொதுக்கூட்டத்திற்கு அனைவரையும் அணிதிரண்டு வருக வருக என  ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் பேரியக்கம் அழைக்கிறது.



உங்களை அன்போடு அழைக்கும்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

வ. களத்தூர் & மில்லத் நகர்

மேலும் தொடர்புக்கு -

செல் – 97153 55170

செல் – 88073 39408

இந்த சிறப்பு மிக்க மாபெரும் சமூக எழுச்சி பொதுக்கூட்டத்தினை www.kallaru.comஎமது கல்லாறு.காம் இணையதளத்தில் நேரடியாக பார்க்கலாம்.


மின்னஞ்சல் மூலமாக
தமுமுக LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக