Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 20 நவம்பர், 2014

நரகம் எப்படி இருக்கும் ...


அஸ்ஸலாமு அலைக்கும் நரகம் எப்படி இருக்கும்:
நரகத்தில் காபிர்கள் முதலில் நுழைவார்கள். அதன்பின் முஹ்மின்களில் பாவிகளும் அவர்களின்பின் நயவஞ்சர்களும் நுழைவர். மனிதரில் ஒவ்வொரு 1000 த்திலும் 999 பேர் நரகம் நுழைவர்.

நரகத்திற்கு எழு வாசல்கள் உள்ளன. அதன் நெருப்பு இவ்வுலக நெருப்பை விட எழுபது மடங்கு கடுமையானதாகும். அதில் நுழையும் காபிரின் உடம்பு வேதனையை அனுபவிப்பதற்காக அது பிரம்மாண்டமாக மாறும். அவனது இரு தோள் புஜங்களுக்குமிடையிலான தூரம் மூன்று நாட்கள் நடந்து செல்லும் தூர அளவும், அவனது பல் உஹது மலையளவுமாக இருக்கும். அவனது தோல் கனத்து தடிப்பானதாக மாறும். வேதனையை அனுபவிப்பதற்காக அது மீண்டும் மீண்டும் மாற்றப்படும்.
நரகவாசிகளின் குடிப்பு குடல்களை எல்லாம் துண்டாக்கி விடும் அளவு கடும் சூடான நீராகும்.
அவர்களுக்கு உணவாகக் கிடைப்பது நரகத்துக் கள்ளி மரமும், நரகவாசிகளின் உடலிலிருந்து வடியும் சீழும்.
நரகில் மிகக் குறைந்த வேதனை உள்ளவனின் நிலை எப்படி எனில் அவனது இரு பாதங்கள் கீழும் நரக நெருப்பின் இரு தணல் கட்டிகள் வைக்கப்படும். அதன் சூட்டினால் அவனது மூளை கொதிக்கும்.
நரகிலே தோல்கள் பழுக்கும் வரை வேதனை கொடுக்கப்படும். மேலும், ஈயம் உருக்கி ஊற்றப்படுதல், நெருப்பின் சூட்டினால் முகம் பொசுக்கப்படுதல், நெருப்பில் இழுத்து செல்லப்படுதல், சங்கிலிகள், விலங்குகள் போன்றவற்றால் கட்டப்படுதல் ஆகிய வேதனைகளும் உள்ளன.
நரகம் மிகவும் அழமானதாகும். நரகக்குழியில் அன்று பிறந்த ஒருவனை வீசப்பட்டால், அவன் அடிப்பகுதியை சென்றடைவதற்கு 70 வருடங்கள் செல்லும்.
கற்களும் காபிர்களும் அதன் எரிகொல்லிகளாகும். அதன் காற்று சுட்டுப் பொசுக்கும் நெருப்பைப் போன்றது. அதன் நிழல் கருத்த புகையாகும். அதன் உடை நெருப்பாகும். அது அதில் வீசப்படும் அனைத்தையும் ஒன்று விடாமல் சுட்டெரித்து விடும். கோபாவேசத்தோடு சப்தத்துடன் அது எரியும். அதன் சூட்டினால் தோல்கள் பொசுங்கிவிடுவதுடன் அதன் உஷ்ணம் எலும்புகள் வரை போய் இதயங்களையும் தொட்டு விடும்.
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நரகத்திலிருந்து காப்பானாக !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக