Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 10 நவம்பர், 2014

தடையை மீறி அணிவகுப்பு ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 216 பேர் கைது


பெரம்பலூர், : பெரம்பலூரில் போலீசாரின் தடையை மீறி அணிவகுப்பு நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 216 பேரை போலீசார் கைது செய்தனர். 
ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000வது ஆண்டு தொடக்க விழா, ஆர்எஸ்எஸ் தொடங்கியதின் 90வது ஆண்டையொட்டியும், சமுதாய சமத்துவ நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்திருந்தது.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று மாலை சீருடை அணிந்து ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்றனர்.
 போலீசாரின் தடையை மீறி துவங்கிய இந்த அணிவகுப்பு ஊர்வலத்திற்கு ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் வக்கீல் பிரசன்னம் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் சந்திரசேகரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையறிந்த பெரம்பலூர் போலீசார் ஆர்எஸ்எஸ் தொண்டர்களை தடுத்து நிறுத்தி, ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்க உங்களுக்கு அனுமதி இல்லை. எனவே, உங்களை கைது செய்கிறோம் என்று கூறி 216 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் பெம்பலூர் பாலக்கரை பகுதியிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, இரவு 9 மணியளவில் விடுவிக்க ப்பட்டனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக