Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 12 நவம்பர், 2014

டி.ஆர்.பி போட்டித்தேர்வு – விண்ணப்பிக்க நவ.26 கடைசி நாள்.

டிஆர்பி போட்டித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 10ம்தேதி முதல் பெரம்பலூரில் விநியோகம் என முதன்மைக் கல்விஅதிகாரி தெரிவித்தார். ஆசிரியர் தேர்வுவாரியத்தால் நடத்தப்படும் முதுகலைப் பட்டதாரிஆசிரியர்
பணி யிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெரம்பலூரில் 10ம் தேதிமுதல் விநியோகிக்கப்படவுள்ளது என முதன்மைக் கல்விஅலுவலர்(பொ) கலையரசி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது : டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வு 2015 ஜனவரி 10ம்தேதி தமிழக அளவில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்கத் தேவையான விண் ணப்பங்கள், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் அலுவலகத்தில் வரும் 10ம் தேதி தொடங்கி, 26ம் தேதி வரை, அலுவலக நேரங்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் அலுவலகத்திற்கு வந்து, ரூ.50 கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தவர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினர்களும் ரூ500க்கும், ஆதிதிராவிடர் இனத்தவர் ரூ.250 க்கும் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து வருகிற 26ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். இதில் ஆதி திராவிடர் இனத்தவர் மட் டும் விண்ணப்பங்களைப் பெற வரும்போது, தங்களது சாதிச் சான்றிதழின் நகலை எடுத்துவர வேண்டும். இந்தத் தேர்வில் எம்எஸ்சி, எம்சிஏ, எம்ஏ, எம்காம் படித்து, பிஎட் பட்டம் பெற் றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர், எனத்தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு டிஆர்பி மூலமாக விநியோகித்திட 4,400 விண்ணப்பங்கள் முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக