Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 14 நவம்பர், 2014

பெரம்பலூரில் தொடர்மழை விவசாயிகள் மகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில்  வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் சூழலில், கடந்த இரண்டு நாட்களாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழக அளவில் பெய்து  வரும் மழை, பெரம்பலூர் மாவட்டத்திலும் குறைவின்றிப் பெய்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அளவில் 11ம்தேதி மட்டும் 93மிமீ  மழை பெய்துள்ளது. இதன்படி செட்டிக்குளம் 22மிமீ, பெரம்பலூர் 15மிமீ, வேப்பந்தட்டை 8 மிமீ, தழுதாழை 43மிமீ, பாடாலூர் 5மிமீ என மொத்தம் 93மிமீ  மழை பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில் சராசரியாக 18.60மிமீ மழை பெய்துள்ளது.

இதேபோல நேற்று மாவட்ட அளவில் பரவலாக நல்லமழை பெய்தது.  காலை 10 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை, விட்டுவிட்டு பெய்தது.  மாலை 4 மணியளவில் பலத்த மழையாகப் பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தேனூர், பாண்டகப்பாடி ஏரிகள் 100சதவீதக் கொள்ளளவை  எட்டியும், மீதமுள்ள 71 ஏரிகள் நிரம்பாமல் உள்ளன. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மேலும் ஐந்தாறு ஏரிகள் நிரம்பி வழியும்  வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக