Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 10 நவம்பர், 2014

வக்ப் சொத்துகள் அதிர்சி தகவல்:

வக்ப் சொத்துகள் அதிர்சி தகவல்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
வக்ப் சொத்துகள் இந்த வார்த்தையை பலர் கேள்வி பட்டதே கிடையாது. பலர் வார்த்தை தெரியும் ஆனால் அதனை பற்றி விவரமாக தெரியது என்பது தான் பலரின் வாதமாக உள்ளது. இந்நிலையில் தான் தற்போது வக்ப் சொத்துகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நேற்று திருநெல்வேலியில் வக்ப் சொத்துகளை பாதுகாப்போம் என்ற குறுபடம் வெளியீட்டுவிழாவினை நடத்தியது.
அதில் குறும்படம் வெளியிடப்பட்டது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் நமக்கு தெரிய வந்துள்ளது,. ஆம் நமக்கு எல்லாம் வக்ப் சொத்துகளை பலர் அபகரித்துள்ளனர். என்பது தெரிந்த ஒன்று தான் அதனால் அந்த சொத்துகளை யார் யார் அபகரித்து உள்ளனர் எனபது தான் அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
இந்திய அளவில் மிக பெரிய நிலத்தின் மதிப்பள்வு கொண்ட மும்பையில் பல ஏக்கர் வக்ப் போர்டு நிலத்தை பண முதலை முகேஸ் அம்பானி குறைந்த விலைக்கு வாங்கி 6 ஆயிரம் கோடியில் வீடு கட்டியுள்ளார்.
இது மும்பையில் மட்டும் அல்ல தமிழகத்தில் திருநேல்வேலியில் மிக் பெரிய நிறுவனமாக செயல்படும் சங்கள் சிமெண்ட் ஆலை வக்ப் நிலத்தை அபகரித்தே அங்கு செயல்படுகிறது.
அது போல் திருச்சி பெல் நிறுவனத்தின் இடமும் வக்ப் போர்ட்டு சொந்தமான இடமாக உள்ளது. இப்படி வக்ப் சொத்துகளை மீட்க முடியாமல் உள்ளது வேதனையளிகின்றது. இதனை மக்களுக்கு தெளிவு படுத்தி ஒவ்வொருவரும் வக்ப் சொத்துகளை மீட்க பாப்புலர் பிரண்ட் தமிகத்தில் இருப்பதை காப்போம், உரிமையை மீட்போம் என்ற முழகத்தில் வக்ப் சொத்துகள் பாதுகாக்க விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தில் நாமும் முழுவமையாக கலந்து கொண்டு அல்ல்லாஹ்வின் இறை சொத்துகளை மீட்க நம்மால் முயன்ற செயல்களில் ஈடுபட கேட்டுகொள்கின்றேன். மேலும் வக்ப் சொத்துகளை பற்றி தெரிந்து கொள்ள பாப்புலர் பிரண்ட் வெளியிட்டுள்ள குறுந்தகட்ரை (சிடி) வாங்கி பயன் பெறுமாறு கேட்டுகொள்கின்றேன். சிடியின் விலை ரூ.20 மட்டுமே.

மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக