Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 28 நவம்பர், 2014

“யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?”


வலிமார்களும்,நாதாக்களும்,மகான்களும்,நல்லோர்களும் வாழ்ந்து மறைந்துள்ள புண்ணிய பூமிகளில் ஆடம்பரங்களும்,அனாச்சாரங்களும்,கொலைகளும்,கொள்ளைகளும் தலைவிரித்து தாண்டவமாடுகிறது.
சம உரிமை என்னும் பெயரில் பெண்ணியத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் செயல்பாடுகள் நாகரீகம் என்னும் போர்வையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
நடுரோட்டில் ஒரு ஆணும்-பெண்ணும் முத்தம் கொடுப்பது நாகரீக கலாச்சாரமாம்.அதை சட்டமாக்க வேண்டுமென்பதற்காக வீதி தோறும் முத்த போராட்டமாம்.
ஆண் இனத்தின் விலங்கினங்களை கண்டால் கூட வெட்கப்பட்டு தன்னை மறைத்துக்கொண்ட மாண்புயர் தாய்மார்கள் வாழ்ந்த ஊர்களில், இன்றைய கால பெண்களின் ஒழுக்கம் கிலோ என்ன விலை என்று கேட்க தோன்றுகிறது?
சின்னஞ்சிறிய ஊர்களில் கூட மாணவர் சமுதாயமே மது,ஹெராயின்,கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தும் அவலநிலை உருவாகியுள்ளது.
அமைதி தவழும் புண்ணிய பூமிகளில் வெடிகுண்டு புரளிகள் பீதியை ஏற்படுத்துகிறது.வட்டி என்னும் நரககுழியின் விஷ நாகம் வீடுகள் தோறும் வறுமை என்னும் இழிச்சொல்லில் நுழைந்து விட்டது.
மனித குலத்திடம் ஒழுக்கம் குறைந்து ஒழுங்கீனம் மேலோங்கி நிற்கிறது.போட்டிகளும்,பொறாமைகளும்,கோள் மூட்டுதலும்,அமானித அபகரித்தலும் வளர்ச்சியின் அடையாளமென கருதப்படுகிறது.
இதயத்தில் அமைதியும் வாழ்வில் நிம்மதியும் உள்ள மனிதரை காண்பது அரிதாகிவிட்டது.அடுத்தவரை கொன்றாவது பணமென்னும் பொருள் ஈட்டும் முயற்சியில் கலப்பட உணவுப்பொருட்களை வியாபார சந்தையாக்கும் ஈனப்பிறவிகள் பெருகி விட்டனர்.
இவைகள் அனைத்தையும் வேதனையுடன் உற்று நோக்கும் எனது நெஞ்சத்தின் கேள்வி இதுதான்: “யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?”

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக