Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 6 நவம்பர், 2014

தனியார் மயமாகும் ரயில்வே டிக்கெட் விநியோகிக்கும் பணி!

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் ரயில்வே பட்ஜெட்டில், ரயில் திட்டப் பணிகள், கட்டமைப்பு வசதிகள், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவை தனியார் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக முதல்கட்டமாக பயணிகளுக்கான அடிப்படை வசதிகளில் ரயில் பயணச்சீட்டு விநியோகிக்கும் பணி விரைவில் தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதன்படி ரயில் பயணச் சீட்டுகளின் முன்பதிவு, பயணச் சீட்டு மற்றும் உடனடி பயணச் சீட்டு ஆகியவற்றை விநியோகிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்படி, தற்போது இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு, கவுன்ட்டர்களில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பயணச் சீட்டுக்களை விநியோகிப் பார்கள். ரயில்வே ஆலோசனைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட இந்த திட்டம் நாட்டின் 16 மண்டலங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ரயில் பயணச் சீட்டு விநியோகிக்கும் கவுன்ட்டர்கள் போதுமான அளவுக்கு இல்லாதது, கவுன்ட்டர்கள் இருந்தும் போதுமான ஊழியர்கள் இல்லாதது ஆகிய காரணங்களால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதன் எதிரொலியாகவே இந்த தனியார் மயம் என கூறப்படுகிறது. இருப்பினும் பட்ஜெட்டில் மோடி அரசு அறிவித்த தனியார் மய அறிவிப்பின் தொடர்பாகவே இது செயல்படுத்தப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக