Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 19 நவம்பர், 2014

பெரம்பலூர், லப்பைகுடிகாட்டில் “அம்மா’ மருந்தகம்!

பெரம்பலூர், லப்பைகுடிகாடு பகுதிகளில் “அம்மா’ மருந்தகம் தொடங்கப்பட உள்ளது 
என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற 61-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கு பரிசுகள், கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கூட்டுறவு சங்கங்களின் மூலம் 146 பயனாளிகளுக்கு ரூ. 81.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கிய ஆட்சியர் பேசியது:

கூட்டுறவுத் துறை மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவில் கறவை மாட்டுக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவுத் துறை மூலம் 2011- 2012-ம் ஆண்டுகளில் ரூ. 20 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்ட நிலையில், 2014- 2015-ம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி பயிர்க் கடன் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை 14,999 விவசாயிகளுக்கு ரூ. 79.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. நகைக் கடனாக ரூ. 71.84 கோடியும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவியாக ரூ. 3.50 லட்சமும், விவசாய இடுபொருள் பொருளீட்டுக் கடனாக ரூ. 18.40 லட்சமும், மத்திய காலக் கடனாக ரூ. 1.93 கோடியும், 177 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதிக் கடனுதவியாக ரூ. 3.25 கோடியும், 22 கூட்டுப் பொறுப்புக் குழுக்களுக்கு கடனுதவியாக ரூ. 78.44 லட்சமும் என மொத்தம் ரூ. 157.64 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் மருந்து கடைகளில் விற்கும் மருந்துகளின் விலையை விட, அதிகபட்ச சில்லறை விலையிலிருந்து 12 சதவீதம் குறைவாக தரமான பொருள்கள் பெரம்பலூர் கூட்டுறவு அமராவதி மருந்தகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்செல்வன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக