Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 23 நவம்பர், 2014

800 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்துவின் கரங்களில் ஆட்சி கிடைத்துள்ளது:அசோக் சிங்கால்!

800 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்து டெல்லியை ஆட்சி புரிகிறார் என்று விசுவ இந்து பரிசத்தின் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.
உலக இந்து மாநாட்டை துவக்கி வைத்து அசோக் சிங்கால் ஆற்றிய உரையில் கூறியிருப்பது:

டெல்லியில் கடைசியாக ஆண்ட இந்து மன்னர் பிருதிவிராஜ் சவுகான் ஆவார்.அதன் பிறகு நரேந்திரமோடி என்ற அபிமானியான இந்துவின் கரங்களின் ஊடே டெல்லியின் ஆட்சி திரும்ப கிடைத்துள்ளது.12-நூற்றாண்டின் 2-ஆம் பகுதியில் வட இந்தியாவை ஆட்சிபுரிந்த பிருதிவிராஜ் சவுகானுக்கு பிறகு இந்த ஆட்சி ஒரு அபிமானியான இந்துவின் கரங்களில் கிடைத்திருக்காவிட்டால் இனியும் 800 ஆண்டுகள் காத்திருந்திருந்த பிறகே அது நிகழ்ந்திருக்கும்.உலகின் நலனுக்கு வெல்லமுடியாத இந்துத்துவம் தேவை.இதற்காகத்தான் 1964-ஆம் ஆண்டு இந்து மதம் ஸ்தாபிக்கப்பட்டது.இவ்வாறு அசோக் சிங்கால் கூறினார்.3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 40 நாடுகளில் இருந்து 1500 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக