Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 12 நவம்பர், 2014

சாதிவாரி கணக்கெடுப்பு: மமக அறிக்கை!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது, இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சமூக
நீதியாளர்களை பேரதிர்ச் சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஒவ்வொரு சமூகத்தின் உண்மை யான மக்கள் தொகையை கண்ட றிந்து, அதற்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் சமூக நீதியாகும். எனவே இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட, அரசியல் சாசன சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக