Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 21 நவம்பர், 2014

முஸ்லிம் ஆடும்! இந்து ஆடும் ?குட்டிகதை!


ஒரு விவசாயி தன இரண்டு ஆடுகளுக்கு
ஒன்றுக்கு முஸ்லிம் என்ற பெயரையும் ஒன்றுக்கு 
இந்து என்ற பெயரையும் வைத்து வளர்த்து வந்தார் ! 
இரண்டு ஆடுகளும் ஒன்றாகவே வளர்ந்தன!
விவசாயியை தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுக்கிறார்!


நிருபர்: ஆட்டுக்கு சாப்பிட என்ன கொடுப்பீங்க
விவசாயி: முஸ்லிமுக்கா, இந்துவுக்கா ? 
நிருபர்: முஸ்லிமுக்கு 
விவசாயி: புள்ளுத்தான்
நிருபர்: அப்போ இந்துவுக்கு 
விவசாயி: அதுக்கும் புள்ளுதான்
நிருபர் : எதுல குளுப்பாட்டுவீங்க
விவசாயி:: முஸ்லிமையா ? இந்துவையா ?
நிருபர் : இந்துவை ?
விவசாயி: தண்ணில தான்
நிருபர் : அப்போ முஸ்லிமை 
விவசாயி: அதையும் தண்ணில தான்
நிருபர்: எங்கே கட்டிபோடுவீங்க
விவசாயி: முஸ்லிமையா ? இந்துவையா ?
நிருபர்: முஸ்லிமை 
விவசாயி: கொட்டகைல தான் 
நிருபர்: அப்போ இந்துவை 
விவசாயி: அதையும் கொட்டகைல தான்
நிருபர்: யோவ் ரென்டுக்கும் ஒரேமாதிரி தானே செய்ரே அப்புறமென்ன?
விவசாயி: அதுவந்து இந்து ஆடு என்னோடது
நிருபர்: அப்போ முஸ்லிம் ஆடு ?
விவசாயி: முஸ்லிம் ஆடும் என்னோடதுதான்
நிருபர்: நீ என்ன லூசா ?
விவசாயி : நீங்கதான்டா லூசு ? 
நிருபர் : என்னய்யா சொல்றே ?
விவசாயி : துப்பாக்கி வெடி குண்டு வச்சு போலிசை, ,ராணுவத்தை தாக்கினால் அவங்க யாரு ? 
நிருபர் : தீவிரவாதிகள்!
விவசாயி : அப்ப ஏண்டா அதை முஸ்லிம் செஞ்சா தீவிரவாதின்னும், இந்து செஞ்சா சாமியார் ஆதரவாளர்கள் ன்னும் சொல்றே ? 
நிருபர் : ஹி ஹி ஹி....

[காலையில் முக நூலில் இரு ஆட்டுக் கதையைக் கண்டதும் கணநேரத்தில் என் மூளையில் உதித்தது ]

-செங்கிஸ் கான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக