Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 14 செப்டம்பர், 2015

இந்துத்துவ ஆட்சியை முன்னோட்டம் விடும் ராஜஸ்தான் அரசு

இந்தியாவின் ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டனி கைப்பற்றியதில் இருந்து சிறுபான்மை மற்றும் தலித் மக்களை மிரட்டும் வகையில் தொடர்ந்து பல அறிக்கைகளை  அதன் அமைச்சர்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.மத்திய அமைச்சர்களின் வெறுப்பூட்டும் அறிக்கைகளை ஆளும் பாஜகவின் மாநில அரசாங்கங்கள் செயல்படுத்தி வருகிறது.

ஜைனர்களின் உண்ணாநோன்பு திருவிழா செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இதை காரணம்காட்டி மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்கு 3 நாட்கள் முதல் 8 நாட்கள் வரை தடை விதித்துள்ளன.
இறைச்சிக்கு தடைவிதித்த சர்ச்சை நீடிக்கும் நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்ற ராஜஸ்தான் அரசின் புதிய உத்தரவு அதை மேலும் தீவிரபடுத்தியுள்ளது.செப்டம்பர் 25-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்த தலைவர் தீன் தயாள் உபாத்யாய் பிறந்த நாள் வருவதால் அன்று பள்ளி, கல்லூரிகளை திறந்து வைத்து ரத்த தானம் முகாம்களை நடத்துமாறு அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இஸ்லாமியர்களின் 2 முக்கிய பெருநாள்களில் ஒன்றான பக்ரீத் வரும் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது.ஆனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.இந்து ராஷ்ட்ரத்தை செயல்படுத்துவதற்கான முன்னோட்டத்தில் ராஜஸ்தான் அரசு இறங்கியுள்ளதாக மதச்சார்பற்ற தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.பக்ரீத்திற்கு விடுமுறை இல்லை என்ற அரசின் உத்தரவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள முஸ்லீம் அமைப்புகள் இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே சூரிய நமஸ்காரம், யோகா பயிற்சி, ஆகியவற்றை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்கியுள்ள ராஜஸ்தான் அரசு இப்போது பக்ரீத் விடுமுறையையும் ரத்து செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக