Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 28 ஜூலை, 2015

யாகூப் மேமன் வழக்கு: மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

சீராய்வு மனு விதிகள் தொடர்பான விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்துமாறு, மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் டைகர் மேமன் தலைமறைவானதை தொடர்ந்து அவருடைய தம்பி யாகூப் மேமன் வழக்கில் அரசிற்கு உதவி செய்வதற்காக இந்தியா வந்து
நீதிமன்றத்தில் ஆஜரானார் ஆனால் காவல்துறை அப்பாவியான அவர்மீது வழக்கு பதிவு செய்து 22-ஆண்டுகள் சிறையில் அடைத்து இறுதியாக யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து யாகூப் மேமன் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. யாகூப் மேமனின் சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 30-ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட உள்ளார். இந்நிலையில், யாகூப் மேமன், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, குரியன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, யாகூப் மேமன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜூ ராமசந்திரன், “மேமனின் சீராய்வு மனு தொடர்பான விசாரணையில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை; அவரது சீராய்வு மனு விசாரணையில் இருந்தபோதே அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, சீராய்வு மனு தொடர்பான விதிகள் குறித்து உரிய விளக்கங்களை செவ்வாய்க்கிழமை அளிக்குமாறு மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் பிறகே, யாகூப் மேமனின் மரண தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக