Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 ஜூலை, 2015

யாக்கூப் மேமன் – உயிர்வாழ்வதற்கான இறுதிகட்ட முயற்சிகள் ஒரு சுருக்கமான பார்வை

ஜூலை 29 – காலை 11 மணி – 14 பக்க கருணை மனு ஒன்று யாக்கூப் மேமன் சார்பில் குடியரசுத்தலைவரிடம் ஒப்படைக்கப்படுகிறது
ஜூலை 29 – மாலை 4 மணி – குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கருணை மனுவை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கிறார்
ஜூலை 29 – இரவு 8.30 மணி – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஷ்டிரபதி பவனுக்கு வருகிறார். குடியரசுத்தலைவரிடம் கருணை மனு விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசின் முடிவை சொல்கிறார்.

ஜூலை 29 – இரவு 9.30 மணி – உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் மற்றும் சாலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆகியோர் ராஷ்டிரபதி பவனுக்கு(குடியரசுத்தலைவர் மாளிகை) வருகின்றனர்.
ஜூலை 29 – இரவு 10.45 மணி – குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கருணை மனுவை நிராகரிக்கிறார்.
ஜூலை 29 – இரவு 10.50 மணி – முக்கிய வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன் மற்றும் ஆனத குரோவர் ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து இல்லத்திற்கு செல்கின்றனர். அங்கு துக்கு தண்டனையை நிறுத்தி வைக்கும்படி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்கின்றனர்.
ஜூலை 29 – இரவு 11.30 மணி – மேலும் பல்வேறு வழக்கரிஞர்களும் நீதிபதி தத்துவின் இல்லத்தில் குவிகின்றனர்.
ஜூலை 30 – நள்ளிரவு 1 மணி – களம் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா இல்லத்திற்கு மாற்றப்படுகிறது.
ஜூலை 30 – நள்ளிரவு 1.30 மணி – அனைத்து வழக்கரிஞர்களும் நீதிபதி தீபக் மிஷ்ராவின் இல்லத்தில் விரைகின்றனர்.
ஜூலை 30 – நள்ளிரவு 1.35 மணி – நீதிபதி தீபக் மிஸ்ரா , பிரபுல்லா சந்திர பண்ட் மற்றும் அமித்தவா ராய் ஆகிய முன்று நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க ஒப்புக்கொள்கிறது.

ஜூலை 30 – இரவு 2.10 மணி – நாக்பூர் சிறைச்சாலை காவலர் ஒருவர் யாக்கூப் மேமனின் உறவினரிடம் அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை ஒப்படைக்கிறார்.
ஜூலை 30 – இரவு 2.30 மணி – மூன்று நீதிபதிகளும் உச்சநீதிமன்றத்திகு வருகின்றனர். ஆனால் அட்டர்னி ஜெனரல் முகுல் ராய் வருவதற்கு தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது
ஜூலை 30 – அதிகாலை 3.20 – மீளாய்வு மனு மீதான விசாரணை துவங்குகிறது
ஜூலை 30 – அதிகாலை 4.50 மணி – நீதிபதிகள் மனுவை நிராகரித்து தீர்ப்பளிக்கின்றனர்
ஜூலை 30 – காலை 6.35 மணி – யாக்கூப் மேமன் தூக்கிலிடப்படுகிறார்

ஆனால் இந்த நாடகங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதே இரவு 3.17 மணியளவில் யாக்கூப் தூக்கு தண்டனைக்கு தயார் செய்யப்பட்டுவிட்டதாகவும். அது தொடர்பான தகவல்கள் அவருடைய உறவினர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக