Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஃபுகுஷிமா அணுஉலை வெடிப்பு: அணுக்கதிர் வீச்சின் பாதிப்பை உணர்த்தும் மரபுப் பிழை பூக்கள் மற்றும் பழங்கள்!

ஃபுகுஷிமா அணுஉலை வெடிப்பு: அணுக்கதிர் வீச்சின் பாதிப்பை உணர்த்தும் மரபுப் பிழை பூக்கள் மற்றும் பழங்கள்!

ஜப்பான் ஃபுகுஷிமாவில் சுனாமியால் அணு உலைகள் அழிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்பு அங்கு பூக்கள் பூத்துக் குலுங்குவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அவைகளில் மரபுப் பிறழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


'RED ZONE' பகுதி அதாவது மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதி என ஜப்பான் அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த பூக்கள் பழங்கள் காணப்படுகின்றன்.

அணுக்கதிர்வீச்சு காரணமாக ஏற்ப்பட்டுள்ள ஜீன் மாற்றம் காரணமாக இது நிகழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் தாக்கம் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்று தெரியாமல் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

உலகின் மோசமான அணு உலை அழிவாக அறியப்படும் இச்சம்பவத்திற்குப் பிறகு அங்கே வசித்து வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது அப்பகுதியில் மரபுபிறழ்ந்த விகாரமான உருவமுடைய பூக்கள் பூத்துள்ளன.



ஜப்பானியர் ஒருவர் சமீபத்தில் அங்கே பூத்திருந்த மரபு பிறழ்ந்த பூக்கள், பழங்களை படம் பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த பூக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனது இயல்பான தோற்றத்தை இழந்து விகாரமாக காட்சியளிக்கும் பூக்கள் மற்றும் பழங்களை பார்க்கும் போதே நமக்குள் ஏதேதோ நினைப்புகள் வருகின்றன. அணு உலை அழிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்பும் அதன் பாதிப்பு இன்னும் அப்பகுதியில் இருப்பதை இந்த பூக்கள் நினைவுபடுத்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக