Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

தேர்தல் வருது ஜாக்கிரதை ...

எங்கள் ஊரின் பாதாள சாக்கடைத் திட்டத்திற்க்கு சட்டமன்றத்தில் எங்கள்
குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திருமிகு சிவசங்கர் எஸ்.எஸ்அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அதிமுகவின் அடிமை அமைச்சர் கே.பி.முனுசாமி அரசு கொண்டு வருகின்ற திட்டங்கள் எல்லாமே முறையாக ஏற்பாடு செய்து அதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான செயல்பாடுகளை இந்த அரசு செய்யும். அதன் அடிப்படையில் உறுப்பினருடைய கோரிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
ஆனால் இப்போ ஆட்சியே முடியப்போகிறது இதுவரை அதிமுக அரசு துரும்பையும் அசைக்கவில்லை. அடுத்து திமுக ஆட்சி வரப்போவது உறுதி எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திருமிகு. சிவசங்கர் எஸ்.எஸ் அவர்கள் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக இதேத் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகப்போவதும் உறுதி அப்பொழுது எங்கள் ஊரின் பாதாள சாக்கடை திட்டம் உட்பட தொகுதியில் உள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படப்போவதும் உறுதி.

நேற்று (21-1-16) அன்று லப்பைக்குடிக்காடு பெயர் பதிவு மாற்றம் சம்மத்தமாக மேற்கு பள்ளவாசல் தலைவரும், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளருமான M. சுல்தான் மொய்தீன். மற்றும் K.A. மீரா மொய்தீன் . மத்திய மண்டல தேர்தல் அதிகாரி (தமுமுக) மற்றும் ஹயாத் பாஷா. மா.து.செயலாளர் ( தமுமுக) நாசர் நகர செ.( தமுமுக) ஆகியோர். மனிதநேய மக்கள் கட்சி தலைரும் .மமக சட்டமன்ற தலைவருமாக Dr.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களைச் சந்தித்து பின்னர் கடிதம் எடுத்து கொண்டு வருவாய் துறை அமைச்சனர் சந்தித்து பிறகு கோரிக்கை மனுவை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் .அஸ்லாம் பாஷா ஓப்படைத்தனர்.கோரிக்கை விரைவில் வெல்ல இறைவனிடம் பிாரத்திபோம்..
* என்றும் நமதூர் பணியில்.



1 கருத்து:

  1. தேர்தல் நெருங்கிவிட்டது!!!
    (4 வருடமாக இல்லாத புதுமை!!!)

    ஆளும் கட்சியின் மூலமாக மக்களுக்கான உதவிகளும்,நலத்திட்டங்களும், இலவசங்களும் சகட்டுமேனிக்கு கிடைக்கும் நேரம்!!!

    ஆளும் கட்சியல்லாத மற்ற அரசியல் கட்சிகள் மூலம் மக்கள் பிரச்சனைகளையும்,மக்களுக்கே தெரியாத பிரச்சனைகளையும் கண்டறிந்து ரோட்டில் நின்று மக்களுக்காக போராடும் நேரம்!!!

    ஒவ்வொரு அரசியல் மற்றும் இயக்கங்கள் தனது பலத்தை நிரூபிக்க மாநாடுகளை நடத்தும் நேரம்!!!

    பொதுமக்களோ இலவசங்களை பெறவும்,திட்டங்களில் இணைக்கவும், போராட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களின் நெறிசல்களிலும் ஏதுமறியாது வரிசையில் நிற்கும் நேரம்!!!

    இதில் நீங்கள் எம்மாதிரி???

    பதிலளிநீக்கு