Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 14 மே, 2012

இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் வரும்

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு... 
கொடுங்கோலன் என்று வர்ணிக்கப்படுகின்ற ஹிட்லர் கூறினான்
"என்னால் எல்லா யூதர்களையும் கொன்றிருக்க முடியும்,
ஆனால் நான் சிலரை விட்டுவைத்தேன், அப்போதுதான் இந்த உலகிற்கு தெரியும் நான் ஏன் அவர்களை கொன்றேன் என்று".

எங்களுடையபால்மணம் மாறா பச்சிழம் குழந்தைகளை கொன்றும் குவிக்கும் கொடியவர்கள் இவர்கள்...
இதோ பாருங்கள் இந்த குழந்தையை....
யா அல்லாஹ் என்று வான் நோக்கி அழைக்கிறது...
இதுவும், இது போன்ற எத்தினையோ குழந்தைகளும் சென்றுவிட்டனர் நம்மை விட்டு...

அந்த குழந்தைகளை பார்க்கும் போது நமது நெஞ்சில் ஓர் வலி...
விரலால் அழுத்தவே அஞ்சும் மேனியில்தோட்டாவால் துளை போட்ட கொடியவர்களே...
உங்களுக்கு இதயம் இல்லையா????

நீங்கள் மார்போடு கட்டியணைக்கும் உங்கள் குழந்தைகள் போன்று
இவர்களும் ஒரு தாயின் குழந்தைதானே...
இன்று எங்கள் குழந்தைகளின் மார்பில் கட்டியணைப்பது
உங்கள் துப்பாக்கி தோட்டாக்கள்....
இன்னும் எத்தினையோ சொல்லிக் கொண்டே போகலாம்
இந்த கண்ணீர் சரித்திரங்களை...
இது கண்ணீர் தேசம்...




எங்கள் சகோதரிகளையும் நீங்கள் விட்டு வைப்பதில்லை...
ஓ கயவர்களே...
ஓ இரக்கமற்ற அரக்கர்களே...
ஓ இதயமற்ற பாவிகளே...

சென்று விட்ட எங்கள் குழந்தைகள் சுவர்க்கப் பூஞ்சோலைக்கு சொந்தக்காரர்கள்...
சஹீதாக்கப்பட்ட எங்கள் சகோதரர்கள்
சுவர்க்கத்தில் பறவை வடிவில் சந்தோசமாக சுற்றித் திரிவர்
இன்ஷா அல்லாஹ்...

ஒரு நாள் வரும்...
இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் வரும்...
அந்த சுதந்திர நாள்...

யா அல்லாஹ்...
எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு பொறுமையை கொடுப்பாயாக...
யா அல்லாஹ்...
எங்கள் சகோதர, சகோதரிகளை பாதுகாப்பாயாக...
யா அல்லாஹ்...
எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு மனவலிமையை கொடுப்பாயாக...
யா அல்லாஹ்...
எங்கள் சகோதர, சகோதரிகளை அழிக்க துடிக்கும் இந்த காபிர்களுக்கு எதிராக நீ உதவி செய்வாயாக...
யா அல்லாஹ் நாங்கள் எல்லோரும் உன் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளோம்...
யா அல்லாஹ் நீ மட்டுமே எங்கள் பாதுகாவலன்....
யா அல்லாஹ் நீதான் பாதுகப்பவரில் எல்லாம் சிறந்த பாதுகாவலன்...

யா அல்லாஹ் எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக
நன்றி : முகநூல் நண்பர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக