Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 15 மே, 2012

இஸ்லாமிய வெறுப்பு மீடியாக்கள்

 உலகில் யார் வேண்டுமானாலும் குண்டுவைக்கலாம்– பழியை ஏற்க அப்பா(வி) முஸ்லீம்கள் இருகிறார்கள் ...

இஸ்லாமியி வெறுப்பு மீடியாக்கள் நம்மை எப்படி மாற்றிவிட்டார்கள் பார்த்தீர்களா? 
இந்துத்துவ அமைப்புகள் வெளிபட்டையாகவே பயிற்சி மேற்கொள்ளுவது போலும் நித்தம் நாம் இணைய தாளத்தில் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம் .எத்தனையோ குண்டுவெடிப்புகளிலும் சம்மந்த பட்டாலும் அவர்கள் தீவிரவாதிகள் இல்லை .செய்யாத தப்பிற்கும் முஸ்லிம்கள் தான் குற்றம் சாட்டுகிறார்கள் .வரலாறை படித்தவர்களுக்கும் உலகை படித்தவர்களுக்கும் முஸ்லிம்களை 
பற்றி தெரியும் .முஸ்லிம்களுக்காக சதி திட்டம் பன்னுபவர்களையும் பற்றி நன்கு அறிவார்கள். அடுத்தவன் வயறு காய கூடாது என்று நினைப்பவனே முஸ்லிம் .அடுத்தவனை சும்மா காய படுத்த நினைப்பான் முஸ்லிம் அல்ல .நாங்கள் பட்ட காயங்களை சொல்ல வேண்டும் என்றால் சொல்லி கொண்டே போகலாம் 

உலகில் எந்த மூலைமுடுக்கில் குண்டு வைத்தாலும் அதற்க்கு விசாரணை தேவையில்லை , ஆராய்ச்சிகள் தேவையில்லை .. அது கண்டிப்பாக முஸ்லீம்கள் தான் வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலையை உருவக்கிவிட்டார்கள் உண்மையான தீவிரவாதிகள்.
நியூயார்க் உலகவர்த்தக மையம் தகர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் இது ஒசாமா பின் லேடன் தான் செய்தான்என்று முன்பே முடிவு செய்து அறிவித்த ஜார்ஜ் புஷ்யின் அறிவு நுட்பத்தை அப்படியே பின்பற்றுகிறது இன்றை உலக நாடுகளின் அரசு ஊடகங்கள். அவர்களுக்கு முழு பக்கபலமாக நிற்கிறது இஸ்லாமிய வெறுப்பு உலக மீடியாக்கள்.
முஸ்லீம்களே…!விழிப்படையவில்லை என்றால் வருங்காலத்தில் நாம் விரட்டி அடிக்கப்படலாம்…!!

எச்சரிக்கை

தீவிரமாக வாதம் செய்து நம்மை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிட்டார்கள் உண்மையான தீவிரவாதிகள்.. அவர்களை நாம் உலகத்திற்கு இனம் காட்ட வேண்டும்.தீவிரவாதத்திற்கு எதிராக களமிறங்க வேண்டும். யார் குற்றமிலைத்தாலும் முஸ்லிமோ , ஹிந்துவோ யாராக இருந்தாலும் தயவு தாட்சனையின்றி அவர்களை தண்டிக்க வலியுறுத்தி கலத்தில் இறங்கவேண்டும்.

சத்தியத்திற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
சத்திய மார்க்கத்திலேயே மரணிக்க வேண்டும்,  அநீதி இளைக்கபட்டோரே! அநீதி இளைக்கபட்டோரின் துஆ இறைவன் அங்கீகரிப்பான். இன்ஷாஅல்லாஹ்....

நன்றி: முகநூல் மற்றும் நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக