Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 14 நவம்பர், 2015

கொலைகாரனே வெளியேறு!! இங்கிலாந்தில் மோடிக்கு கடும் எதிர்ப்பு..


லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக “கொலைகாரனே வெளியேறு” என்ற பதாகைகளுடன் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயனமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், அந்நாட்டு அதிபர் டேவிட் காமரூனை சந்திக்கிறார், பின்னர் அவர் இங்கிலாந்து இளவரசியுடன் நடக்கும் பகல் விருந்திலும் கலந்து கொள்வார் என்று திட்டமிடப்படிருந்தது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெறிவித்து பல்வேறு அமைப்பினர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாலர்கள் லண்டன் “டவ்னிங்க் தெருவில்” கூடி பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மூன்று வருடங்களுக்கு முன்பு வரை குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் படுகொலைகளுக்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டு மோடி இங்கிலாந்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நிர்மலா ராஜசிங்கம் என்ற போரட்டக்காரர் தெரிவிக்கையில் ” நாங்கள் நீண்ட காலமாக நரேந்திர மோடிக்கு எதிராக போராடி வருகிறோம், அவர் இன்னும் தன்னுடைய குஜராத் படுகொலை சம்பவங்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், அவர் இந்தியாவை சிறுபான்மையினருக்கு எதிரான நாடாக உருவாக்கிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

மற்றொரு ஆர்ப்பாட்டக்காரரான “தமான் சிங் சித்து” தெரிவிக்கையில் ” மோடியின் ஆட்சியில் சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள் என அனைத்து சிறுபான்மையினரும் அச்சுருத்தப்படுவதாக தெரிவித்தார்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக