Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 11 நவம்பர், 2015

துபாயில் நடந்த லப்பைக்குடிக்காடு மில்லத் கல்வி அறக்கட்டளையின் IAS & IPS கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி துளிகள்...



அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 07/11/2015 அன்று  IAS & IPS கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மில்லத் கல்வி அறக்கட்டளையால் நமதூர் மக்கள் 40 நபர்கள்  முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பேராசிரியர், முனைவர், ஜனாப்.சே.மு.மு. முகமது அலி அவர்களுக்கு நமது மில்லத் அறக்கட்டளையின் மூலம் சிறப்பு வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.


அதை தொடர்ந்து பேராசிரியர் அவர்கள் நமது சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

நமதூரில் படித்தவர்களின் (படிப்பவர்களின்) எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகின்றது, ஆனால் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு என்று வரும் போது வெளிநாடுகளையே  நம்பி இருக்கின்றனர்.  தமிழ்நாட்டிலும் , இந்தியாவிலும் உள்ள அரசு சார்ந்த மற்றும் அரசு சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்புகளில் நாம் கவனம் செலுத்துவது இல்லை.அதற்க்கான முறையான விழிப்புணர்வும்,வழிக்காட்டுதல்களும் இல்லை.



இன்ஷாஅல்லாஹ் நமது பிள்ளைகளை அரசு சார்ந்த உயர்ந்த துறைகளில் சேர நாம் ஊக்குவித்து அவர்களின் கரம் பிடித்து அழைத்து செல்வது அவசியம். மேலும் IAS - ஐ பற்றிய தேவையில்லாத கற்பனை பயத்தை விட்டு அல்லாஹ்வின் உதவியாலும் கடின உழைப்பாலும் எட்டிப்பறிக்க வேண்டும். இதன் மூலம் நமது சமுதயத்திற்கு மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும்.
இதற்காக சென்னை கோடம்பாக்கம் பள்ளிவாசலில் SIAS அகாடமி ஆரம்பம் செய்யப்பட்டு மாணவர்களை தயார் செய்து கொண்டு வருகின்றோம். 

லப்பைக்குடிகாட்டில் இருந்தும் மாணவர்கள் படித்து கொண்டு இருகின்றார்கள். இன்ஷாஅல்லாஹ் இதன் வெற்றிக்காக துஆ செய்யும் படியும் கேட்டு கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக