Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 11 நவம்பர், 2015

பாஜக அனைவரையும் தீவிரவாதிகளாக மாற்றி வருகிறது – லாலு பிரசாத் யாதவ் குற்றச்சாட்டு

மதவாத சக்திகளுக்கு எதிராக ஒரு இயக்கம் தொடங்கப்படும் என்றும் அதற்காக விரைவில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்ப தாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித் துள்ளார்.

பிஹார் தேர்தலில் லாலு, நிதிஷ் கூட்டணி மொத்தம் உள்ள 243-ல் 178 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில், ஆர்ஜேடி 80 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உரு வெடுத்துள்ளது. இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் நேற்று செய்தியாளர்ளை சந்தித்தார். அப்பொழுது அவர் பஜக-வையும் பிரதமர் மோடியையும் கடுமையாக சாடினார்.
நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் மோடி மீது கோபம் அடைந்துள்ளனர். பிஹார் தேர்தல் முடிவு இதை பிரதிபலிக்கிறது. இதன்மூலம் நாட்டு மக்கள் சிறிதளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
இனி நிதிஷ் குமார் பிஹார் மாநிலத்தை கவனித்துக் கொள்வார். மதவாத சக்திகளுக்கு எதிராக ஒரு இயக்கத்தை தொடங்குவது தொடர்பாக நான் விரைவில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
இதன் முதல்கட்டமாக மோடியின் வாரணாசி தொகுதிக்குச் செல்வேன். அங்கு மக்களவைத் தேர்தலின் போது மோடி அளித்த வாக் குறுதிப்படி வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளதா என லாந்தர் விளக்கு (ஆர்ஜேடி சின்னம்) உதவியுடன் தேடுவேன்.
நாட்டில் யாருக்கும் பாது காப்பு இல்லாத சூழல் நிலவு கிறது. பாஜக அனைவரையும் தீவிரவாதிகளாக மாற்றி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று சொன் னார்கள். ஆனால், இதுபோன்ற மோசமான நிலையை நாடு எப்போதும் பார்த்ததில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக