Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 1 டிசம்பர், 2015

நமதூரில் மழை மானி அமைக்கப்படுமா ?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் மழை அளவைக் கணக்கிட மழைமானி அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் வட்டத்தில் பாடாலூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை வட்டத்தில் வெண்பாவூர், தழுதாழை ஆகிய பகுதிகளில் மட்டுமே மழையின் அளவைக் கணக்கிட மழைமானி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிகளவில் மழை பெய்யும் கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள குன்னம் வட்டத்தில் மழைமானி இல்லை. அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக குன்னம் பகுதியில் உள்ள வெள்ளாறு மற்றும் சின்னாறுகளில் காட்டாற்று வெள்ளம் ஓடுகிறது. 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 33 ஊராட்சிகளைக் கொண்ட குன்னத்தில் அதிக நீர்ப்பிடிப்பு பகுதியாக திருமாந்துறை,லப்பைக்குடிக்காடு, அகரம்சீகூர்,வடக்கலூர், ஒகளூர், வேப்பூர், புதுவேட்டக்குடி ஆகிய கிராமங்கள் கருதப்படுகிறது.

குன்னம் வட்டத்தில் மழைமானி அமைக்கப்படாததால் மழை அளவை கணக்கிட முடியாத நிலை உள்ளது.

எனவே,குன்னம் வட்டத்தில் பெய்யும் மழையைக் கணக்கிட மழை மானி அமைக்க வேண்டும். ஒரு வருவாய் வட்டத்துக்கு ஒன்று அல்லது 2 இடங்களில் மட்டுமே மழை அளவு கணக்கிடப்படுகிறது. இதைத் தவிர்த்து, வருவாய்க் கிராமங்கள் தோறும் மழைமானி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக