Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் திறப்பு விழா ...



பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மற்றும் புதிய அலுவலகம் திறப்பு விழா பெரம்பலூர் ஜே.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்க கவுரவ செயலாளர் ஹமீதா கலாம் தலைமை
வகித்தார். மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் புதிய அலுவலகத்தை இந்திய விமன் லீக் அகில இந்திய தலைவரும், மாநில முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கவுரவ செயலாளர் தஸ்ரிப் ஜஹான் துவக்கி வைத்தார். அனைவரையும் கவுரவ இணைச் செயலாளர் ஜியாவுத்தீன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரம்பலூர் நூர் பள்ளிவாசல் முன்னாள் தலைவர் முகமது இஸ்மாயில் பேசியதாவது:

பெண்கள் வீட்டிலே இருந்த பொழுது அவரது திறமைகள் தெரிய வரவில்லை, அவர்கள் பள்ளிக்கு பாடங்கள் பயின்று அவரிடம் பேசும் போது தான் அவரது திறமைகள் தெரியவருகிறது. எவ்வளவு பெரிய அறிவாளிகளாகவும், ஆசிரியர்களாகவும், பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், எண்ணற்ற திறமையுடன் உள்ளனர். ஒரு வீட்டில் ஆண் படிப்பதை விட பெண் படிப்பது பெருமைக்குரியது. அனைத்து பெண்களையும் கல்வி கற்க செய்து அவர்களின் கண் திறக்க வேண்டும். கல்லாததால் அவர்களது வாழ்க்கை பழாகாமல் தடுக்க வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில முஸ்லீம் பெண்கள் உதவும் சங்க தலைவர் முகமத் கமாலுத்தீன், பெரம்பலூர் துறைமங்கலம் பள்ளிவாசல் தலைவர் சுல்தான் இப்ராகிம்,லப்பைக்குடிக்காடு பள்ளிவாசல் தலைவர்கள் முகமது இஸ்மாயில், சுல்தான் மைதீன், மற்றும் அக்ரி அப்துல் ஹாதி, பெரம்பலூர் 4 வார்டு கவுன்சிலர் அப்துல் பாரி பெரம்பலூர் டவுன் பள்ளிவாசல் பெருளாளர் அல்லாபிச்சை, வி.களத்தூர் பள்ளிவாசல் தலைவர் லியாகத் அலி, பெரம்பலூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் முகமது ரபிக், பெரம்பலூர் மாவட்ட எஸ்.டி.டி.யு தலைவர் சித்திக் பாஷா, டாக்டர் ஜபருல்லா, பெரம்பலூர் ஜே.கே மகால் உரிமையாளர் அபுல்கலாம், நூர் பள்ளிவாசல் முன்னாள் தலைவர் முகமது இஸ்மாயில் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் கவுரவ இணை செயலாளர் ரசீத் அஹமத் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக