Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வரவேண்டாமென கேரள முதவருக்கு நிர்ப்பந்தம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள SNDP எனும் அமைப்பு நடத்தும் விழாவில் கேரள முதல்வர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகையை காரணம் காட்டி முதல்வர் உம்மன் சாண்டியை விழாவில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து முதல்வர் உம்மன் சாண்டி தெரிவிக்கையில், அந்த அமைப்பின்
பொதுச்செயலாளர் வெள்ளாப்பள்ளி நடேசன் நீங்கள் கலந்து கொள்வதை பிரதமர் வட்டாரங்கள் விரும்பவில்லை, எனவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தியதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அரசாங்க விதிமுறைகளின் (புரோட்டோகால்) படி பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள வேண்டும் எனவும், தனக்கு ஒரு முதல்வராக அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், பிரதமர் அலுவலகத்தில் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர்கள் வி.எஸ். அச்சுதானந்தன் மற்றும் பிரனாயி விஜயன் ஆகியோரும் பிரதமர் அலுவலகத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக