Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 31 டிசம்பர், 2015

நிர்பயாவினால் பயனடைந்த தேவதாசிகள்


நிர்பயாவினால் பயனடைந்த தேவதாசிகள்

டில்லியில் நடைபெற்ற ஜோதி சிங் (நிர்பயா) கற்பழிப்பு தற்பொழுது தேவதாசி முறையில் பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்களுக்கு மறைமுகமாக உதவுகிறது. நிர்பயா வழக்கு மூலம் கடுமையாக்கபட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களினால் இந்த தேவதாசி முறையும் பாலியல் கொடுமை என்று தற்பொழுது வகைபடுத்தப்பட்டுள்ளது.

இன்றளவும் ஆந்திர மாநிலங்களில் நடைமுறையில் உள்ள தேவதாசி முறைப்படி ஒரு பெண் ஒரு கோயிலுக்காகவோ அல்லது ஒரு கடவுளுக்காகவோ அர்பணிக்கப்படுவாள். அவருடன் உறவு கொள்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் சாதாரன குடும்ப வாழ்வை வாழ அந்த பெண் அனுமதிக்கப்படுவது இல்லை.
பெண்களை பாலியல் அடிமைகளாக்கும் இந்த முறை தற்பொழுது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 370 மற்றும் 370A இன் கீழ் பாலியல் குற்றங்களாக கருத்தப்படும். இதன் மூலம் தேவதாசிகளாக பயன்படுத்தப்படுவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவது குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சமாக 7 வருடங்களில் இருந்து அந்த நபரின் இயற்கை ஆயுட்காலம் முடிவது வரை அவரின் குற்றசெயலுக்கு ஏற்ப சிறை தண்டனை வழங்கப்படும் என்று தெரிகிறது.
நிர்பயா மூலம் பல அப்பாவி பெண்கள் தங்கள் கற்பையும் வாழ்வையும் பெற்றதாகவே இதனை கருத முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக