Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 22 ஜூன், 2012

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி கல்வித்தகுதி பள்ளிகளில் பதிய ஏற்பாடு பதிவு பணி 15 நாள் நடைபெறும்


பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பள்ளி வளாகங்களிலேயே பதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,950 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 7,559 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே, அவர்களது கல்வித்தகுதியினை தாங்கள் படித்த பள்ளிகளிலேயே பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தங்களுடைய கல்வித் தகுதியை வேலை வாய்ப்பக இணையதளம் (   ஷ்ஷ்ஷ்.tஸீஸ்மீறீணீவீஸ்ணீணீவீஜீஜீu.ரீஷீஸ்.வீஸீ) மூலம் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து ஈடுப்பட்டு வருகின்றனர்.
 பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்கு வரும் பொழுது ரேஷன்கார்டு மற்றும் சாதிச் சான்றிதழ்களை உடன் எடுத்து வர வேண்டும். மேலும் தங்களது ரேஷன் கார்டில் பதிவுத்தாரரின் பெயர் இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தற்போது புதியதாகப் பதிவு செய்ய விரும்புவோருக்கு புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை, பதிவு செய்யும் நாளிலேயே உடனுக்குடன் வழங்கப்படும். மாணவ, மாணவிகள் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வித்தகுதியை பள்ளிகளில் பதிவு செய்த பின்னர், தங்களுடைய முன்னுரிமையை வேறு ஒருவேலை நாளில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்யது கொள்ள வேண்டும். 10ம் வகுப்பு தவறிய மாணவ, மாணவிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த பதிவு வருகிற 5ம் தேதி வரை 15 நாட்கள் செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக