Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 9 ஜூன், 2012

பெண்களின் திருமண வயது

15-வது வயதில் முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் முடிக்கலாம் – டெல்லி உயர்நீதிமன்றம்!
Muslim girl can marry at 15 if she attains puberty- Delhi high court
புதுடெல்லி:வயதுக்கு வந்த முஸ்லிம் இளம்பெண்கள் 15-வது வயதிலேயே திருமணம் முடிக்கலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
18 வயது பூர்த்தியாகாமல் முஸ்லிம் பெண்களுக்கு அவர்களுடைய பெற்றோருடைய அனுமதி இல்லாவிட்டாலும் கணவருடன் வசிக்க இஸ்லாமிய மார்க்கம் அனுமதிப்பதாக நீதிபதிகளான ரவீந்திர பட், எஸ்.பி.மார்க் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது.
இதுத்தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பும், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் கருத்துக்களையும் மேற்கோள்காட்டிய உயர்நீதிமன்றம், 15 வயது பூர்த்தியான முஸ்லிம் பெண்களின் திருமணம் செல்லுபடியாகும் என கூறியது.
16 வயது இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று திருமணம் முடித்ததாக குற்றம் சாட்டி அப்பெண்ணின் தாயார் தாஹிரா பேகம் சமர்ப்பித்த ஹேபியஸ் கார்பஸ்(ஆட்கொணர்வு மனு) மனு மீதான விசாரணையில் டெல்லி உயர்நீதிமன்ற பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
தாஹிரா பேகத்தின் மனுவை தள்ளுபடிச் செய்த நீதிமன்றம், திருமணம் முடித்த அவரது மகள் தனது கணவர் வீட்டில் வசிக்கவும் அனுமதி அளித்தது. கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் முடித்த அந்த பெண், தற்பொழுது டெல்லி அரசின் கீழ் இயங்கும் காப்பகத்தில் தங்கியுள்ளார். தம்பதிகள் மற்றும் அவரது பெற்றோரிடம் ஒவ்வொரு ஆறு மாதம் கழியும் தோறும் சிசு பாதுகாப்பு மையத்தின் முன்னால் ஆஜராகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
நன்றி: Thoothu Online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக