Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 ஏப்ரல், 2015

+2வில் எந்த குரூப்பை தேர்வு செய்வது?

+2வில் எந்த குரூப்பை தேர்வு செய்வது?


10 ஆம் வகுப்பு முடித்து 11ம் வகுப்பு செல்கின்ற போதே சில பாடப்பிரிவுகளைக் கொண்ட குரூப் பிரிக்கப்பட்டு மாணவர்கள் அந்த நிலையிலேயே தங்களுக்கான எதிர்கால துறைகளை தேர்வு செய்திட வேண்டிய கட்டாயம் இன்றைய கல்வி முறையில் நிலவுகிறது.


பக்குவம் இல்லாத மாணவர்கள்,

உயர்கல்வி குறித்தும் வேலை வாய்ப்பு குறித்தும் புரிதல் இல்லாத பெற்றோர்இதனால் மாணவர்களின் தனித்திறன் அவர்களின் பொருளாதார வசதிகள் குறித்து தெரிந்து கொள்வதற்கு பொறுமை இல்லாத ஆசிரியர்கள்மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு குரூஃப் ஒதுக்கி சிக்கலில் தள்ளிவிடுகின்றனர்.

இதனால்12ம் வகுப்பு முடித்து தனக்கு விருப்பமான பாடத்தை எடுத்து படிக்க முடியாமல்பயின்று வந்த குரூப் வட்டத்திற்குள் நின்றே உயர் கல்வியை தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் நிலவுகிறது.

ஒரு மனிதன் வாழ்வின் எந்த நிலையிலும் எந்த வயதிலும் எதை வேண்டுமானாலும் படித்து பட்டம் பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்க வேண்டும். உலக நாடுகளில் அத்தகைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் அந்த நிலை இல்லை.

அதனால் 10ம் வகுப்பு முடித்து குரூப் எடுக்கும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை 10ம் வகுப்பில் 275 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் அனைவரும் அறிவியல் பாடத்தில் விருப்பம் இருந்தால் ‘‘உயிரியல்’’ குரூப்பை தேர்வு செய்வது நல்லது.

அறிவியலில் விருப்பம் இல்லாதவர்கள் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும் கலைப்பிரிவு குரூப் எடுப்பது தான் சிறந்தது.

முடிந்த வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை தவிர்ப்பது நல்லது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை எடுப்பவர்களுக்கு மிகக் குறுகிய எண்ணிக்கையிலான படிப்புகளும் வேலைவாய்ப்புகளுமே உள்ளது. ஆய்வாளர்களாகசாதனையாளர்களாக உருவாகும் வாய்ப்பு இதில் குறைவு.
எச்சரிக்கை தேவை!

மின்னஞ்சல் மூலம்
Basha Haja Mohideen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக