Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

நிலம் கையகப்படுத்தும் சட்டம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!


புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டம் மறுபிரகடனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 இதுதொடர்பாக, பாரதிய கிஷான் சங்கம் உள்ளிட்ட சில விவசாய சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
 அப்போது, மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவற்கு அரசுக்கு சாதகங்கள் இருந்தும், மசோதாவிற்கு வேண்டுமென்றே அவசரச் சட்டத்தை பிறப்பித்திருப்பதற்கு தடை விதிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து 4 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக