Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

இஷ்ரத் சஹாபுதீன் ஷேக் (42) மும்பையில் வளர்ந்துவரும் ஒரு தொழிலதிபர்.


இஷ்ரத் சஹாபுதீன் ஷேக் (42) மும்பையில் வளர்ந்துவரும் ஒரு தொழிலதிபர்.
மும்பை மாநகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமானசுவையான உணவுகளை தரத்துடன் வழங்கும் ஷாலிமார் ஹோட்டலின் உரிமையாளர். பொருளாதாரக் கல்வியையும் இஸ்லாமியக் கல்வியையும் ஒரு சேர வழங்கும் நவீன மயமாக்கப்பட்ட ஒரு பள்ளிக் கூடத்தின் நிறுவனர்.
ஓரளவு வசதியுள்ள குடும்பத்தில் பிறந்த இஷ்ரத் 18 வயதில் சஹாபுத்தீன் ஷேக்கிற்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். மகிழ்ச்சியாகச் சென்ற குடும்ப வாழ்க்கையில் 2002 இல் நடந்த ஒரு விபத்தில் கணவனை இழந்தார். 
ஐந்து குழந்தைகளோடு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டிய நேரத்தில் தெளிவான முடிவுகளை எடுத்தார். அவரே கூறுகிறார்: அந்த வேளையில் ஒருபுறம் எனது குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு மறுபுறம் வியாபாரத்தையும் ஏற்று நிர்வகிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன்.
அவர் ஷாலிமர் ஹோட்டலை பொறுப்பேற்று நடத்தத் தொடங்கினார். 350 பணியாளர்களுடன் தனது தேர்ந்த நிர்வாக மேலாண்மையால் சிறப்பாக அந்த ஹோட்டலை நடத்தி வருகிறார். மேலும் இப்போது இரண்டு கிளைகளை திறக்க இருக்கிறார்.
எப்போதும் ஹிஜாபுடன் இருக்கும் இஷ்ரத் அவர்களிடம் சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்கான உத்வேகத்தை எங்கிருந்து பெற்றீர்கள் என அவரிடம் வினவப்பட்ட போது அவர் சொன்ன பதில் உண்மையில் ஆச்சரியத்திற்கும் ஆழ்ந்த சிந்தனைக்கும் உரியது.
பல வரலாற்றுச் செய்திகளைக் கேட்டு அதை நாம் எப்போதும் எளிதாக கடந்து சென்று விடுகிறோம். ஆனால் வரலாறு எந்தளவு நம்முடைய வாழ்க்கைக்கு உத்வேகமளிக்கும் என்பதை அவருடைய பதில் தெளிவாக்குகிறது. எனக்கு உத்வேகத்தை வழங்கியது நபி (ஸல்) அவர்களின் மனைவி முஃமீன்களின் அன்னை கதீஜா (ரழி) அவர்கள் தலை சிறந்த வணிகராகதொழிலதிபராக விளங்கியதுதான்.” 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கதீஜா (ரழி) யின் வாழ்க்கை, 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ஒரு உத்வேகத்தை வழங்கி இருக்கிறது. 
வியாபாரம் வெற்றிகரமாக நடப்பதற்கு ஹோட்டல் மற்றும் பள்ளிக்கூட பணியாளர்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம்.
இஷ்ரத்துடன் அவரது மகன் உமைரும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு 16 வயதான பொழுதே வியாபாரத்தில் பங்கேற்க துவங்கி விட்டார். தனது எதிர்கால திட்டங்களை குறித்து இஷ்ரத் கூறுகையில்… 
ஹோட்டலை எனது மகன் உமைரிடம் ஒப்படைக்கப்போகிறேன். அவர் இத்தொழிலில் கை தேர்ந்துவிட்டார். எனது கவனத்தை ஸஃபா பள்ளிக்கூடத்தில் செலவழிக்கப்போகிறேன். இந்த ஆண்டே இளநிலை கல்லூரி ஒன்றையும் துவக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்கிறார்.
ஹிஜாப் குறித்து அவர் கூறுகையில்….
ஹிஜாப் எனக்கு ஒரு போதும் தடையாக இல்லை. இதில் சுவராஸ்யம் என்னவெனில் வெளியாட்களுடனும் எனது பணியாளர்களுடனும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட ஹிஜாப் தான் எனக்கு உதவுகிறது என்கிறார்.

மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மொய்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக