பிரிவினைகளும், புதிய இயக்கங்களின் வருகையும் தமிழகத்திற்கு புதியதல்ல.அதற்காக அழுது புலம்பியோ, வருத்தப்பட்டோ எந்த புண்ணியமும் கிடைக்கப்போவதில்லை.இன்றைய பெரும்பாலான இயக்கங்களிடம் அடுத்த ஐந்தாண்டுக்கான ஏதேனும் செயல்திட்டம் கைவசம் உள்ளதா?என்று கேட்டுப் பாருங்கள்!எதுவுமே இருக்காது.இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக வாழ்க்கையை நெறிப்படுத்துவது எப்படி?இந்தியாவில் முஸ்லிம் அரசியல் கொள்கையை எவ்வாறு வடிவமைக்கவேண்டும்? பன்முக சமூகத்தில் நமது அரசியல்,
வியாழன், 8 அக்டோபர், 2015
ஞாயிறு, 4 அக்டோபர், 2015
அய்… (சிறுகதை) ...
ஊருக்கு நடுவே அழகான முடி திருத்தும் நிலையம் வைத்திருப்பவர் அப்துல்லாஹ். அழகான மனைவி, இரண்டு ஆண் பிள்ளைகள், சிறந்த வருமானம் என்று வாழ்ந்து வந்தார். தினமும் இரவு வீட்டிற்க்கு செல்லும்போது குழந்தைகளுக்கு தின்பண்டங்களும் வாங்கிச் செல்வது வழக்கம்.
இஷா தொழுகை முடிந்த பின் இரு சகோதரர்களின் கண்களும் வீட்டு வாசலையே எதிர் நோக்கி இருக்கும் தந்தையின் வருகைக்காக…! தந்தையை கண்டவுடன் “அஸ்ஸலாமு அலைக்கும் வாப்பா… உம்மா சேட்டை பண்ணிட்டேனு அடிச்சிட்டாங்க வாப்பா” என்றான் இளைய மகன் அய். “அப்பாடியா தங்கம்… அழாத… வாப்பா உனக்கு மிட்டாய் வச்சிருக்கேன். இனி சேட்டை பண்ணக் கூடாது” என்றார் அப்துல்லாஹ்.
இந்திய சிறைகளில் முஸ்லிம்கள் ...
1.இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் 3 லட்சத்து 81 ஆயிரம் பேர் கைதிகளாக உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 54 ஆயிரம் பேர் விசாரணை கைதிகள் ஆவார்கள்.
2.விசாரணை கைதிகளில் மக்கள் தொகை கணக்கீட்டின்படி மற்ற மதத்தினரை விட முஸ்லீம்களே அதிக அளவில் உள்ளனர். விகிதாச்சாரபடி இந்துக்களை விட முஸ்லிம்கள் 2 மடங்கு உள்ளனர். 21 சதவீத முஸ்லிம்கள் விசாரணை கைதிகளாக இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் உள்ளனர்.
கண்டுகொள்ளப்படா இந்திய முஸ்லிம்களின் குரல்கள்!
சிறைபட்டுக் கிடந்த சுதந்திரத்தை மீட்டெடுத்த கொண்டாட்டத்தினை ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் நாம் வெகு விமர்சையாக கொண்டாடினோம். சுதந்திர காற்றை இன்றைய சமூகம் சுவாசிக்க முடிகிறதெனில் பலரின் மூச்சுக் காற்றுகள் மூர்ச்சையான வரலாறுகள் ஏனோ திரிபுத் தத்துவங்களாக மாற்றப்பட்டுக் கிடக்கின்றன.
பெரும்பான்மை தத்துவங்கள்,
ஆர்எஸ்எஸ் – பாஜக இடையே ‘மேட்ச் பிக்சிங்’ நடைபெறுகிறது : சோனியா காந்தி
பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
பாகல்பூர் அருகே காஹல்கவானில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சோனியா காந்தி, சமூகத்தை துண்டாடும் சக்திகளை புறக்கணிக்க வேண்டும் என்றும், இடஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். இடையே ‘மேட்ச் பிக்சிங்’ நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.
நேபாளம் மோடிக்கும் ஆமாம் சாமி போடும் நாடு அல்ல : அறிவிக்கபடாத பொருளாதர தடை விதித்துள்ளதாக இந்தியா மீது ஐநா சபையில் நேபாளம் புகார்
காத்மாண்டு:’இந்திய எல்லையை ஒட்டிய, முக்கிய, வர்த்தக முனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையால், நேபாளத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’ என, ஐ.நா., பொதுச் செயலரிடம், இந்தியாவுக்கு எதிராக, நேபாளம் புகார் கூறியுள்ளது. ‘நில எல்லை கொண்ட நாடுகள் இடையே, அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதில் தடை இருக்கக்கூடாது’ எனவும், அந்நாடு வலியுறுத்தி உள்ளது.
நேபாளத்தில், புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு,
வெள்ளி, 2 அக்டோபர், 2015
காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை ...
தீவிர இடதுசாரிப் பின்புலம் கொண்டவர் பேராசிரியர் அ. மார்க்ஸ். கூடவே, பெரியாரியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இப்படிப்பட்ட கோட்பாட்டுப் பின்னணியைக் கொண்ட ஒருவர், காந்தியைப் பற்றித் தொடர்ந்து ஆக்கபூர்வமான சித்திரத்தை முன்வைத்துவருவது அரிதான விஷயம். அ. மார்க்ஸுடன் பேசியதிலிருந்து…
தீவிர இடதுசாரிக் கோட்பாட்டுப் பின்புலத்திலிருந்து காந்தி நோக்கி நகர்ந்தது எப்படி?
ஆறுதல் கூறக்கூட கிராமவாசிகள் யாரும் வரவில்லை - கிராமத்தை விட்டு வெளியேறும் அக்லாக்கின் குடும்பம்!
ஆறுதல் கூறக்கூட கிராமவாசிகள் யாரும் வரவில்லை - கிராமத்தை விட்டு வெளியேறும் அக்லாக்கின் குடும்பம்!
புதுடெல்லி: பசு இறைச்சியை சாப்பிட்டதாக குற்றம் சாட்டி உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி பிசோதா கிராமத்தில் இந்துத்துவ வன்முறைக் கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட முஹம்மது அக்லாக்கின் குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர்.இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வந்த கிராமத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
செவ்வாய், 29 செப்டம்பர், 2015
எது சிறந்த கல்வி?
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அறிவு. அறிவைத் தேடுவது, அறிவு ஞானத்தை வளர்ப்பது, அதனை அடுத்தவருக்கு எத்தி வைப்பது, அடுத்த தலைமுறைக்கு அதனைக் கொண்டு சேர்ப்பது போன்றவை மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள சிறப்பு.
அறிவைத் தேடுவதற்கு ஊக்குவிக்கும் ஒரு கிரந்தம்தான் திருக்குர்ஆன். சிந்தனைக்கும், ஆராய்ச்சிக்கும் அது தூண்டுகோலாக அமைகிறது.
திங்கள், 28 செப்டம்பர், 2015
ரேடியோ ஸலாம் மாறுமா?
ஐக்கிய அரபு அமீரகத்தில் 106.5 அலைவரிசையில் ரேடியோ ஸலாம் என்ற தமிழ் FM வானொலி இயங்கி வருவது அமீரக தமிழ் மக்கள் அறிந்ததே.
BJP, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இன்னும் ஆளே இல்லாத இந்து இயக்கங்களின் செய்திகளை தவறாமல் சொல்லும் இதற்கு முஸ்லிம் இயக்கங்களின் எவ்வளவு பெரிய போராட்டங்களாக இருந்தாலும் கண்களுக்கு தெரியவில்லை என்பது ஆச்சரியமே.
பர்ஜானா – சிறுகதை
பர்ஜானாவும், பாத்திமாவும் சிறு வயது முதல் தோழிகள். இப்போது வயது அறுபதிற்கும் மேலாகிவிட்டது. இன்றும் தங்களது நட்பை தொடருகிறார்கள். வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் நல்ல நட்பை பேணி வருகிறார்கள்.
பர்ஜானாவிற்கு இரண்டு பையன்கள். இரண்டு பேருமே வெளிநாட்டில் வேலை செய்து நல்ல நிலையில் இருப்பதால் அடிக்கடி வீட்டிற்கு வர முடியாவிட்டாலும் எப்போதாவது ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு மட்டும் தனது மனைவி, பிள்ளைகளுடன் வந்து தனது அம்மாவை பார்த்து செல்வார்கள்.
எண்ணப்பட வேண்டிய இந்து தேசியத்தின் இறுதி நாட்கள்!
பட்டேல்களின் விசித்திரமான இடஒதுக்கீடு கோரிக்கையும், போராட்டமும், அதை பின்நின்று இயக்கும் மோடியின் அரசால் இந்தியாவின் மதச்சார்பின்மையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை முழக்கமும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தேசத்தை சூழ்ந்திருக்கும் இந்த இடர்பாடுகளில் இருந்து அதை மீட்டெடுக்க வேண்டிய கடமை தேச நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு சாமானிய இந்தியனுக்கும் இருக்கிறது.
புதன், 23 செப்டம்பர், 2015
மக்கா ஹஜ் பயணிகளுக்காக ஜித்தாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்ததான முகாம்
ஹஜ் செய்வதற்காக உலகம் முழுவதிலிருமிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகரத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக நேற்று (18-09-15 வெள்ளிக்கிழமை) ஜித்தாவிலுள்ள கிங் ஃபஹத் மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்த இந்த முகாமில் 165 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 129 பேரிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டது.
முஹம்மது அஹமது ! (ஒரு பார்வை)
இன்றைக்கு முஹம்மது அஹமது விவகாரம் ,உலகமெங்கும் பேசப்படுகிறது .அமெரிக்காவில் தான் செய்த கடிகாரத்தினை ,தனக்கு படித்துக் தரும் ஆசிரியரிடம் காண்பிப்பதற்காக கொண்டுச் சென்றவனை ,வெடிகுண்டு கொண்டு வந்திருப்பான் என்கிற அனுமானத்தில் அவனைப் போலிசிடம் ஒப்படைத்தனர்.பிறகுதான் தெரிந்தது.அது குண்டு அல்ல ,கடிகாரம் என்பது .பின்னர் அஹமது விடுவிக்கப்பட்டான்.இவ்விவகாரம் வெளியானப் பிறகு ,ஒபாமா வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறார் அஹமதுவை.இப்படியாக லட்சக்கணக்கில் அஹமதுவிற்கு ஆதரவு குவிகிறது.சரி !சந்தோசம் மகிழ்ச்சி.
ஞாயிறு, 20 செப்டம்பர், 2015
செவ்வாய், 15 செப்டம்பர், 2015
உயிரூட்டப்பட்ட நீதிதேவதை!
தணலின் மீது விழுந்த தூறல் போல தாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம், ஆனால் கேட்பாரற்று அனாதைகளாகிவிட்டோம் எனும் வேதனை நெருப்பில் வெந்து கொண்டிருந்த கஷ்மீரத்து முஸ்லிம்கள் மனதில் ஒரு நம்பிக்கைச் சுடராக உன்னதமான தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதையும் நமது இராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ளதுதான் நமது கண்களை ஆனந்தத்தில் பனிக்கச் செய்கிறது.
திங்கள், 14 செப்டம்பர், 2015
பெருகும் கல்வி வியாபாரம் ...
ஒரு சமுதாயம் எவ்வாறு உருவாகிறது? ஒரு நாடு எவ்வாறு உருவாக்கப்படுகிறது? ஒரு தேசத்தில் மக்களுடைய மன நிலை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? ஒரு வளர்கின்ற நாட்டில் புதிய தலைமுறைகளை எப்படி வளர்த்தெடுக்கப்படுடுகிறது? போன்றவைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் இன்று வளர்ந்த நாடுகள், வளர்கின்ற நாடுகள் என்று நாம் பெருமையாக பேசுகிற நாடுகள், கல்வியை முதன்மைப் படுத்தியதால்தான் வளர்ந்தன என்று சொல்வதற்க்கு பெரிய அளவில் அறிவோ, திறமையோ அவசியமில்லை.
ராஜஸ்தானில் பக்ரீத் விடுமுறை ரத்து : பாஜக அரசு உத்தரவால் சர்ச்சை!
ஜெய்ப்பூர்: பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்று ராஜஸ்தான் பா.ஜனதா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைப் பின்பற்றி சத்தீஸ்கர் மாநிலமும் ஜைன மதத்தின் பண்டிகையையொட்டி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இந்த சர்ச்சை நீடித்து கொண்டிருக்கும் போது இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்ற ராஜஸ்தான் அரசின் உத்தரவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“இறைச்சி விற்பனை தடை” உத்தரவை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றம்!
மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வரும் 17ம் தேதி இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மும்பை மாநகராட்சியால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை எதிர்த்து ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்த மனுவை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனுப் வி. மோத்தா, அஜ்மத் சயாத் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இறைச்சி விற்பனை உள்ளிட்டவற்றை 2 நாள்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக கடந்த 2004ம் ஆண்டே மகாராஷ்டிர அரசு விதிகளை கொண்டு வந்திருந்தாலும், அதை இதுவரை முழுமையாக செயல்படுத்தவில்லை. ஆனால், திடீரென அந்தத் தடையை 4 நாள்களாக நீடித்தது ஏன்?
ஞாயிறு, 13 செப்டம்பர், 2015
சனி, 12 செப்டம்பர், 2015
வியாழன், 10 செப்டம்பர், 2015
புதன், 9 செப்டம்பர், 2015
அட்சேதின் ஔரங்கஸிப் ஆலம்கிரி..!!
இந்தியா மாறி கொண்டிருகிறது நாம் மாறவேண்டும், இன்னும் 2002குஜராத்தில் நடந்த விபத்தை மட்டுமே வைத்து 2015 மோடியின் இந்தியாவை மதிப்பிடுவது தவறு என்றும்,அவ்வாறு மதிப்பிட்டால்,தேசத்தின் மீதான உங்கள் மதிப்பு சந்தேகத்திற்கு உரியது என்றும் பரிவாரங்கள் புளுகத் தொடங்கிவிட்டன. இதன் விளைவாய் உங்கள் மீதான மதிப்பை மறுபரி பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தேசத்தை தள்ளுகிறீர்கள் என்று மாற்றத்திற்கான வரையரையும் தேசியத்திற்கு புதிய இலக்கணத்தையும் வகுத்து அக்ரஹாரத்து அம்பிகளும்,அதனை வழிமொழியும் மோடியின் தம்பிகளும் பிரமிப்பூட்டுகிறார்கள்.
மறுபுறம் இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களை குழிதோண்டி புதைக்கும் துவேஷ கருத்துக்கள்,பணவீக்கம் ,பொருளாதார மந்தநிலை , ஊழல்,வெளிப்படையற்ற அரசு நிர்வாகம்,பங்குசந்தை வீழ்ச்சி,விலைவாசி உயர்வு, கடமை தவறும் நீதித்துறை, உளவு துறையின் உளறல்களை ஊர்பரப்பும் ஊடகங்கள் என அனைத்து துறைகளிலும் கடும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது இந்தியா.
என்னை மதசார்பற்றவன் என்று உங்களை எது எண்ண வைத்தாலும், தெரிந்துகொள்ளுங்கள்… நான் ஒரு இந்து! திரிபுரா மாநில ஆளுநர் டதகட்ட ராய்
திரிபுரா : திரிபுரா மாநில ஆளுநர் டதகட்ட ராய், ”தான் ஒரு மதசார்பற்றவன் இல்லை, ஒரு இந்து” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அருண் நம்பியார் என்ற நபரின் தற்போதைய இந்தியாவின் பாசிச அரசுக்கு எதிரான போராட்டம் என்ற பதிவுக்கு பதில் கூறும் விதமாக டதகட்ட ராய் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.
என் தேசம் ஒரு மதசார்பற்ற தேசமாக இருந்தாலும், நான் ஒரு இந்து என்று பதிவு செய்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த திரிபுரா மாநில CPM கட்சியின் பொதுச் செயலாளர்
ஞாயிறு, 6 செப்டம்பர், 2015
வியாழன், 3 செப்டம்பர், 2015
புதன், 2 செப்டம்பர், 2015
ஆம். நம்பிக்கை தேய்ந்து தான் விடும். நீதித்துறை மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை!..
“முன்று மணி நேரம் தலையை மறைக்கவில்லை என்றால் உங்கள் இறை நம்பிக்கை ஒன்றும் தேய்ந்து விடாது.”
“தலையை மறைக்காமல் தேர்வு எழுத முடியாது என்பது உங்கள் அகங்காரத்தின் வெளிப்பாடு.”
“இது சிறுபிள்ளைத் தனமான செயல்”
மேலே உள்ள வார்த்தைகள் பாஜக எம்பி சாக்ஷியால் சொல்லப்பட்டதல்ல..சிவசேனாவின் சாம்னா தலையங்கத்திலும் வெளி வந்ததல்ல. ஆர்எஸ்எஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)