Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 1 ஜூன், 2015

‘தோ கண்டா கா டைம் மிலா, சாரா முல்லாஹோம் கோ காட்லா’


ஃபரீதாபாத்: ’இரண்டு மணிநேரம் கிடைத்துள்ளது.அனைத்து முஸ்லிம்களையும் கொன்றொடுக்குவோம்’ என்ற ஆக்ரோஷ முழக்கத்துடன் வன்முறையாளர்கள் அடாலி கிராமத்தில் நுழைந்தனர்.அப்பகுதியின் எஸ்.ஐ
பாபுலால் டாடிக் கிராமத்திற்கு வந்து திரும்பிச் சென்ற உடனே டிம்பிள் என்ற ஜாட் இளைஞரின் தலைமையிலான கும்பல் வந்தது.அவர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தீக்கிரையாக்கினர்.25 வீடுகளும், கடைகளும், நான்கு ட்ராக்டர்கள், மூன்று கார், இரண்டு ஆட்டோரிக்‌ஷாக்கள், 40 பைக்குகள் ஆகியவற்றை தீக்கிரையாக்கினர்.இம்மாதம் 25-ஆம் தேதி ஹரியானா மாநிலம் பல்லாபர்கில் நடந்த கலவரத்தை விவரிக்கிறார் நேரடி சாட்சியான நஸீம் அல்வி.
கிராமத்திற்கு வருகை தந்த இன்ஸ்பெக்டர் பாபுலாலிடம் அப்பகுதியில் பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கிராமவாசிகள் தெரிவித்திருந்தனர்.ஆனால், அவர் அதனை பொருட்படுத்தவில்லை.இங்கு ஒரு பிரச்சனையும் ஏற்படாது என்று கூறியவாறு சிரிப்பை உதிர்த்துள்ளார்.அவர் சென்று 10 நிமிடங்களுக்குள் கலவரம் துவங்கியது.’நமக்கு இரண்டு மணிநேரம் அவகாசம் கிடைத்துள்ளது.அதற்குள்ளாக அனைத்து முஸ்லிம்களையும் கொன்றொழிக்கவேண்டும் என்று முழக்கமிட்டனர்.கலவரம் துவங்கியவுடன் கிராமவாசிகள் அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அவசர போலீஸ் உதவிக்கான நம்பர் 100க்கும் அழைத்து உதவி கோரியுள்ளனர்.ஆனால், யாரும் பாதுகாப்புக்கு வரவில்லை.கலவரம் ஆரம்பித்து சரியாக இரண்டரை மணிநேரம் கழித்தே போலீஸ் வந்ததாக நஸீம் கூறுகிறார்.ஸஹீர்தீன் – நிஸாரா தம்பதியினரின் 7 மாத குழந்தை ராபிஆவை  பெட்ரோல் ஊற்றி தீயிலிட்டு பொசுக்குவதற்கான கலவரக்காரர்களின் முயற்சியை அப்பகுதி மக்கள் தடுத்து விட்டனர்.குழந்தையின் மீது பெட்ரோலை ஊற்றிவிட்ட தீப்பந்தத்தை குழந்தையின் மீது வன்முறையாளர்கள் எறியும் முன்னர் அக்குழந்தையை பசுவுக்காக கொடுக்க வைத்திருந்த தண்ணீரில் எறிந்து காப்பாற்றியுள்ளனர்.
வன்முறையாளர்களில் ஒருவரை கூட போலீஸ் கைதுச் செய்யவில்லை.கலவரத்திற்கு தலைமை தாங்கிய டிம்பிளை கிராமவாசிகள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பிறகும் அவனை விடுவித்ததாக கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.கலவரம் தொடர்பாக சாதாரண பிரிவில் 13 வழக்குகளை போலீஸ் பதிவுச் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக