Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 21 ஜூன், 2015

உடல் ஆரோக்கியம் நம்மிடம் எப்படி இருக்கின்றது?

இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் தங்களுடைய உடலை பேணுவதில் முறையற்று காணப்படுகின்றனர். சாப்பாடு விஷயமாக இருந்தாலும் சரி, உடற்பயிற்சி விஷயமாக இருந்தாலும் சரி, ஓய்வெடுப்பதில் இருந்தாலும் சரி, உடலுக்கு தேவையானதை செலுத்துவதில் நாம் அலட்சியமாக இருக்கின்றோம்.
அதனுடைய விளைவு சிறு வயதிலேயே உடல்
ஆரோக்கியமற்று, சோர்வடைந்து சுறு சுறுப்பில்லாமல் காணப்படுகின்றோம். இதனால், எந்த ஒரு விஷயத்திலும் நாம் முழு மனதுடன் செயல்பட முடியாமல் போகின்றது. அது, தொழிலாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் விளையாட்டாக இருந்தாலும், ஒரு முழுமையான ஈடுபாட்டுடன் செய்வதில்லை.
மனிதர்கள் இன்று இரண்டு இடங்களில் அதிகமாக தங்களுடைய நேரங்களை செலவழிக்கக்கூடிய சூழல்கள் ஏற்பட்டுள்ளது. ஒன்று மருத்துவமனை. மற்றொன்று ஆலோசனை மையம். இந்த இரண்டு இடங்களுககு மக்கள் அதிகமாக செல்வதற்குண்டான காரணங்கள் ஆரோக்கியமின்மையே ஆகும். இருக்கும் இடத்தில் எல்லாம் கிடைப்பதால், நாம் எதையும் கஷ்டப்படாமலேயே பெற விரும்புகின்றோம். வெளியில் செல்ல வாகனம், படிக்கட்டுகளுக்கு பதிலாக லிப்ட் என்று உடல் உழைப்பின்றியே எல்லாம் இருக்கின்றது.
இதனால், நாளடைவில் நமக்கு கொலஸ்ட்ரால், சுகர், ரெத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் தாக்கக்கூடிய சூழல்கள் ஏற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பருவத்திலேயே உடற் ஆரோக்கியமில்லா நிலையில் காணப்படுகின்றோம்.
இதைப்போக்க ஒவ்வொருவரும் முயற்சி எடுத்தால், ஆரோக்கியமானவர்களாக திகழலாம். நாம் ஆரோக்கியமாக இருந்தால், நம் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். நம் குடும்பம் ஆரோக்கியமாக இருந்தால், நம் அண்டை வீட்டார் ஆரோக்கியமாக இருப்பார்கள். அதன் மூலம் நம் ஊர் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் நம் நாடு ஆரோக்கியமாக இருக்கும்.
இப்படி ஒரு தனிமனிதன் தன்னை ஆரோக்கியமாக வைக்கும்பொழுது, நாடே ஆரோக்கியமாகின்றது. அதனால், நாம் எவ்வளவு வேலையாக இருந்தாலும், தினமும் நாம் இரண்டு விஷயங்களை செயல்படுத்தி வந்தால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
1. உடற்பயிற்சி 2. தியானப் பயற்சி.
இந்த இரண்டும் ஒருவரிடத்தில் இருக்கும்போது, அவன் எவ்வளவு பெரிய சவாலையும் எதிர்கொள்வான். அதனால், இந்த பயிற்சிகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.
1. உடற்பயிற்சி
உடல் வலிமை என்பதுப்பற்றி பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. பலமானவருக்கும்,பலஹீனமானவருக்கும் சமூகத்தில் கிடைக்கக்கூடிய மதிப்பில் வித்தியாசம் உள்ளது. சீனாவில் கராத்தே பயிற்சி இல்லாத பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்க்க மாட்டார்கள். எல்லா பள்ளிக்கூடங்கள் மற்றும் வீடுகளில் கராத்தே செய்வதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள்.
ஆனால், நாம் உடற்பயிற்சி செய்வதில்லை. நோய் வந்த பிறகு வருத்தப்படுகிறோம். தினமும் காலை மற்றும் மாலையில் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். இதில், வாக்கிங் செல்லுதல், ரன்னிங் செல்லுதல், கயிற் துள்ளி போன்றவைகளையெல்லாம் செய்யுங்கள்.
முப்பது நிமிடங்களும் முழுமையான ஈடுபாட்டோடு உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால், உங்களிடம் தைரியம், மனநிம்மதி, உயர்வான சிந்தனை, சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மை, துணிவு போன்றவைகள் ஏற்படுகின்றன.
உடலின் வடிவமைப்பும் அழகாகின்றது. உடலின் எடை கூடாமல் இருப்பது, உடல் மிகவும் மெலிந்து காணப்படாமல் இருத்தல் போன்றவைகள் நாம் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உருவாகின்றது.
வேலையில் சுறுசுறுப்பு, பொழிவான முகம், நேர்மறையான சிந்தனைகள் உடற்பயிற்சியால் ஏற்படுகின்றன. நமக்கு சரி என்று படக்கூடிய விஷயங்களை, துணிவுடன் செய்யக்கூடிய ஆற்றல் ஏற்படுகின்றது. நேரம் எப்பொழுதெல்லாம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்தியுங்கள். வலிமையானவராய் திகழுங்கள்.
உடற்பயிற்சியின் பலன்கள்:
* இதய நோய்களிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கின்றது.
* 50 சதவீதம் நீரிழிவு, புற்றுநோய், அதிர்ச்சி, மனஅழுத்தம்  போன்றவற்றிலிருந்து பாதுகாக்க முடிகிறது.
* 30 சதவீதம் இள வயது மரணத்தை குறைக்க முடியும்.
* 35 சதவீதம் மன அழுத்தம் குறையும்.
* 50 சதவீதம் குடல் புற்றுநோய் ஏற்படுவது குறையும்.
* 20 சதவீதம் மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்புக் குறையும்.
* 68 சதவீதம் பின் முதுகுப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புக்கள் குறையும்.
* 30 சதவீதம் இளமையைப் பாதுகாக்க முடியும்.
(அல்ஹஸனாத் மாத இதழ், மே,2015)
உடற்பயிற்சி செய்வதற்கான சில ஆலோசனைகள்:
* அதிகாலையில் எழுந்திருத்தல்
* வீட்டில் காணப்படும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல்
* அதிக நேரம் இடத்தில் இருப்பதை தவிர்த்தல்
* நின்ற நிலையில் வேலைகளைச் செய்தல்
* நமது தோட்ட வேலைகளை நாமே செய்தல்
* பிள்ளைகளுடன் விளையாடுதல்
* ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்காது 30 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது எழுந்து நடத்தல்
*  உணவருந்திய உடன் உறங்குதல், உட்கார்ந்திருப்பதைத் தவிர்த்தல்
* அதிகமாக நடத்தல். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 நிமிடமாவது நடக்க வேண்டும்.
(அல்ஹஸனாத் மாத இதழ், மே,2015)
2. தியானப் பயிற்சி
மனிதர்களிடம் உள்ள பெரும்பாலான பிரச்சனைகளில் முக்கிய காரணமாக இடம் பிடிப்பது, “மனக்குழப்பம்தான்”. மனம் ஒரு நிலையில் இல்லை. மனம் என்பது குரங்கு என்பார்கள். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தாவிக் கொண்டே இருக்கும். இதுதுõன், மனமாக இருக்கின்றது.
ஆசை, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்றவைகள் உள்ளம் அமைதி இழந்து காணப்படுவதற்கான சூழலாக இருக்கின்றது. எப்பொழுதும் மனதை ஒருநிலைப்படுத்தியவர்கள் வெற்றி பெறுவார்கள். அதை செய்ய தவறியவர்கள் தோல்வியை தழுவுவார்கள்.
இது கால ஓட்டத்தில் மனநோயாக மாறுகின்றது. இதையெல்லாம் போக்க தினமும் நாம் அதிகாலையில் எழுந்து தியானம் பயிற்சி மேற்கொள்வதன் மூலம், மேற்சொன்னவைகளில் இருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கும்.
இதை நாம் வெளியில் சென்றுதான் கற்க வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே நாம் செய்யலாம். இன்று பெரும்பாலானவர்கள் யோகா மையத்தை நாடியே செல்கின்றனர். ஏனென்றால், மனம் அமைதி பெற வேண்டும் என்பதறக்காகத்தான். ஆனால், இதை நாமே செய்து பார்த்தால் அதனுடைய பலனை பெற முடியும்.
அதிகாலையில் அந்த அமைதியான சூழலில் எழுந்து யாரும் தொந்தரவு இல்லாத இடத்தில் கண்களை மூடி நாம் படைத்த இறைவனை நினைவுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தும்போது,உடல் உறுப்புகள் எல்லாம் அமைதி அடைந்து, மனமும் அமைதி அடைந்து ஒரு ஆனந்தத்தை பெற முடியும். இதன்மூலம் உடலும், உள்ளமும் ஆரோக்கியம் பெறுகிறது. நாம் கவனம் செலுத்த வேண்டிய இலக்கை நோக்கி வேகமாக முன்னேறிச் செல்ல உதவுகிறது.
இதனால், வாழ்க்கையில் தியானப் பயிற்சியை தினமும் செய்யுங்கள். முடியாதவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது செய்யுங்கள். வீடு, அலுவலகங்கள், நண்பர் வட்டம் என்று எல்லா இடங்களிலும் சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் காணப்படுவீர்கள். எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவமும் ஏற்படும். வாழ்க்கை பிரகாசமாக மாறும்.
இதனால், மனிதர்கள் தங்களுடைய வாழ்வில் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எவ்வளவு வேலைப்பாடுகளுக்கும் மத்தியில் நேரத்தை ஒதுக்குங்கள். இல்லையேல் பிற்காலத்தில் மருத்துவமனைகளுக்கும், ஆலோசனை மையங்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டி வரும்.
அதனால், முதுமை வருவதற்கு முன்பு இளமையை பயன்படுத்துங்கள். இல்லையேல் இளமையே முதுமையாக மாறிவிடும் என்பதை மனதிற்கொண்டு ஒவ்வொருவரும் உடற் ஆரோக்கியமானவர்களாக இருப்போம். வல்லரசு இந்தியாவை உருவாக்குவோம். 
Thanks & Regards,
NELLAI SALEEM,
Cell – 96772 01727

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக