Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 1 ஜூன், 2015

மோடி உதவி செய்யாவிட்டாலும் இருப்பதை பிடுங்க வேண்டாம் – ஆர் எஸ் எஸ் கண்டனம்

புதுடெல்லி: தொழிலாளர்களுக்கு ஏதும் உதவிகள் செய்யாவிட்டாலும் அவர்களிடம் உள்ளவற்றை பறிக்க வேண்டாம் என ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிலாளர் அமைப்பான BMS மற்ற வர்த்தக தொழிலாளர் அமைப்புகளுடன் இணைந்து பாஜகா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோடி ஏழ்மையின் நிலையை புரிந்து கொள்ள மாட்டார். இந்தியாவின் மேற்கு பகுதிகளிலும் கிழக்கு பகுதிகளிலும் வறுமையை நிலையை அவர் பார்க்க வேண்டும். வறுமைநிலை என்பது ஒருவன் வெறும் சோற்றுடன் மிளகாயும் உப்பும் உண்டு வாழும் நிலை ஆகும் என BMS அமைப்பின் செயலாளர் K .C மிஸ்ரா கூறினார்.

BMS அமைப்பின் செயலாளரான K .C மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ் இன் இணை அமைப்பான (சங்கதான் மந்திர் என்ற) பாரதிய மஜ்தூர் சங்கை சேர்ந்தவர் BMS இல் செயலாற்றும் 22 ஆர் எஸ் எஸ் பிரச்சகரர்களில் மிஸ்ரா மிகவும் மூத்தவர் , தெங்கடி பவனில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அவர் பேசுகையில் . மோடியின் அரசு தொழிலாளர் நலனுக்காக எதையும் செய்ய வில்லை. குறைந்தது பெரும் போராட்டங்களுக்குப் பின் தொழிலாளர்கள் பெற்றிருக்கும் உரிமைகளை அபகரிப்பதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். கரிபி (ஏழை) என்பதன் முழு அர்த்தம் மோடிக்கு தெரியாது. இந்தியாவின் கிழக்கு பகுதிகளை பார்த்து அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
“கரிபி என்பதை மோடி பரிந்து கொள்ள மாட்டார். இந்தியாவின் மேற்குப் பகுதிகளின் வறுமை நிலையை தான் அவர் பார்த்துள்ளார். அங்கு யார் ஒருவர் வீடும், காரும் இன்ன பிற பொருள்களுடன் மேற்கொண்டு ஒரு மாடி கட்ட இயலாதவரோ அவரே ஏழை என்பதாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால் கிழக்கிந்திய பகுதிகளான ஜார்கண்ட் . ஓடிஸா, மேற்கு வங்காளம், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏழை என்பது குடிசையில் இருந்து கொண்டு பெரும்பாலும் மிளகாயும் உப்பும் மட்டும் சேர்த்து வெறும் சோற்றை உண்டு வாழ்பவர்களே எழைகள்.
உண்மை நிலை என்னவென்றால் பிஜேபி ஆட்சியில் தொழிலாளர்களாக வேலை செய்வது என்பது கடினமானதாக உள்ளது. நாங்கள் எப்போதுமே பிஜிபிக்குதான் வாக்களிதுள்ளோம். ஆனாலும் பிஜேபி அரசுடன் நாங்கள் கடுமையாக போராட வேண்டி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக