Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 14 அக்டோபர், 2015

நமதூர் வெள்ளாறில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஆற்றில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி நேற்றிரவு உயிரிழந்தனர்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெரங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் நந்தீஸ் (13). இவர், லப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் மகன் ஹரீஸ் (8). இவர், பெரங்கியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பகுதியில் ஓடும் வெள்ளாறில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர். அப்போது, ஆற்றில் இறங்கி குளிக்க முயன்றபோது மாணவர்கள் இருவரையும் தண்ணீர் அடித்துச் சென்றது.

இதனிடையே, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆற்றுப் பகுதிக்கு சென்று பார்த்தபோது, அவர்கள் இருவரையும் ஆற்று வெள்ளம் இழுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரின் உதவியுடன் ஆற்றில் தேடிய நிலையில், லப்பைகுடிகாடு ஆற்றங்கரையில் ஒதுங்கிய நந்தீஸ், ஹரீஸ் ஆகியோரின் உடல்கள் நள்ளிரவு 2 மணிக்கு மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த மங்கலமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவர்களின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, ஹரீஸ் தந்தை ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக