Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 20 அக்டோபர், 2015

இட ஒதுக்கீடு சர்ச்சை : ஆர்.எஸ்.எஸ். – பாஜக இடையே முரண்பாடு

“இடஒதுக்கீட்டு முறையை மறுபரீசீலனை செய்ய வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சில வாரங் களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அமித்ஷா மிகவும் கோபமாக “பாஜகவின் நிலைப்பாடு என்னவென்பதை கேட்பதற்கு முன்னர் ஊடகங்கள் பாஜக மீது கொண்டுள்ள நிலைப்பாடு என்ன என்று தெரிவிக்க வேண்டும்” என்றார். பிஹார் தேர்தல், நிதிஷ் ஆட்சி தொடர்பான கேள்விகளை கேட்குமாறு அறிவுறுத்தினார்.

பின்னர் சற்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசிய அமித்ஷா, “பாஜக தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு முறையை ஒருபோதும் எதிர்க்கவில்லை. நாங்கள் எப்போதுமே அதை ஆதரிக்கிறோம். இப்போதைக்கு இடஒதுக்கீடு முறையை வேறு எந்த வித மாற்றமும் செய்யாமல் அப்படியே தொடர விரும்புகிறோம்” என்றார்.
“நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக எழுத்தாளர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், அவர்கள் குறிப்பிட்டுக் காட்டும் தாத்ரி சம்பவம் நடந்தது உத்தரப்பிரதேச மாநிலத்தில். கல்புர்கி கொல்லப்பட்டது கர்நாடக மாநிலத்தில்.
இந்த இரண்டு சம்பவங்கள் நடந்த மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இல்லை. அப்படி இருக்க எல்லா சர்ச்சைகளுக்கும் பாஜகவை கைகாட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக