Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 23 அக்டோபர், 2015

“பால்தாக்கரேவின் காலில் விழுந்து கிடந்தவர் மோடி” உச்சமடையும் சிவசேனா – பிஜேபி மோதல்!.

மத்திய அரசிலும் மகாராஷ்டிர அரசிலும் அங்கம் வகிக்கும் சிவசேனா, பாஜக இடையிலான மோதல் முற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் யுத்தத்தை தொடங்கி உள்ளது சிவசேனா.
தாதர் பகுதியில் உள்ள சேனா பவனில், கட்சியின் கிழக்கு மும்பை பிரிவு சார்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதில் சிவசேனா கட்சியின் நிறுவனர் மறைந்த பால் தாக்கரே முன்பு மோடி தலைவணங்கி நிற்பது போன்ற புகைப்படம் உள்ளது.

மேலும் அந்தப் புகைப்படத் துடன், “இப்போது புகழின் உச்சியில் உள்ள உங்கள் (மோடி) தலை, ஒரு காலத்தில் பால் தாக்கரேவின் காலடியில் மண்டியிட்டதை மறந்துவிட்டீர்களா” என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இப்போது இந்த போஸ்டர் அகற்றப்பட்டுவிட்டதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக, சிவசேனா இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழுந்தது. இதனால் இரு கட்சிகளுக்கிடையிலான நீண்டகால உறவு முறிந்து, தனித்தனியாக போட்டியிட்டன. எனினும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வேறு வழியின்றி இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.
அப்போதிலிருந்தே அமைச்சரவை இலாகா பங்கீடு, ஜெய்தாபூர் அணு மின் நிலையம் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற இருந்த பாகிஸ்தான் கசல் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி சிவசேனா எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. மேலும் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த சுதீந்திர குல்கர்னி மீது சிவசேனா தொண்டர்கள் மை வீசி தாக்கினர். இந்த விவகாரங்களால் இரு கட்சிகளுக்கிடையிலான மோதல் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக