Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 2 டிசம்பர், 2014

இந்துத்துவாவின் 5M என்கிற ஐந்து புதிய அஜண்ட்டா!


5M என்ற புதிய அஜண்டாவை முன் வைத்து இந்தியாவில் புதிய பிரச்சினைகளுககு வித்திடத் துவங்கியிருக்கின் றன சங்பரிவாரங்கள்.
இந்த "5M'களும் இந்து சமு தாயத்திற்கு மிகப் பெரிய எதிரி களாக கட்டமைத்திருக்கின்றன இந்துத்துவாக்கள்! அதென்ன 5M?

1. M Marxism (மார்க்ஸிஸம்),
2. Mecaulayism (மெக்காலே வின் கல்விமுறை ), 
3. Missionaries (கிறிஸ்தவ மத போதனைகள்),
4.Materialism (பொருள் முதல் வாதம்), 
5. Muslim Terroism (முஸ் லிம் தீவிரவாதம் ) 
- இவைகள்தான் இந்து சமூகத்தை அச்சுறுத்தி வருவ தாக சங்பரிவாரம் கூச்சலிடு கின்ற அந்த 5M.


கடந்த 3ம் தேதி டெல்லியில் முடிவடைந்த மூன்று நாட்கள் உலக இந்து காங்கிரஸ் மாநாட் டில் இந்த 5M களையும் மையப் படுத்தி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த துண்டு பிரசுரத்திற்கு "சிந்த னைத்தாள்' (பட்ர்ன்ஞ்ட்ற் டஹல்ங்ழ்) என பெயரிட்டிருக்கிறது இந்துத்துவா.

'இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான 5 தீய எண்ணங்களின் தொகுப்பு' என இந்த துண்டு பிர சுரத்திற்கு தலைப்பு வைக்கப்பட் டுள்ளது. இவை, இந்து தர்மத் தின் ஆதாரங்களை பலவீனப்ப டுத்துகின்றன; தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக இந்து சமுதா யத்தை பலவீனப்படுத்தி வந்தி ருக்கின்றன' என்று அறிமுகம் தருகிறது இந்த துண்டு பிரசுரம்.
இந்த 5Mகளும் பல்வேறு மாறு வடிவங்களில் தம்மை வெளிப்ப டுத்தி வருகின்றன. ""சிலவேளை மாவோயிஸ்டுகள் என்ற பெய ரில் கொரில்லா முறைகளுடன் மரண விரல்களாக மாறி இந்துக் கள் மீது தாக்குதல்களை நிகழ்த் துகின்றன. அதே சமயம், வேறு விரல்கள் ஜிஹாதிகள் என்ற வடிவில் இந் துக்கள் மீது தாக்குதல்களை நடத்து கின்றன. இந்த இரண்டு வித விரல்களும் தங்களின் நட வடிக்கைகளில் இருக்கும்போதே, "காதல் முத்தம்' என்ற பெயரில் கலாச்சார பண்பா ட்டின் மீது இன்னொரு தாக்குதல் தொடுக் கிறது என்று இந்து மக்கள் மத்தி யில் விஷத்தை ஏற்றுகிறது இந்த துண்டு பிரசுரம்.
மார்க்சியம் என்பது, கம்யூ னிஸ்டுகள், சோஷியலிஸ்ட்கள், தாராளவாதிகள், மாவோயிஸ்ட் டுகள், அராஜகவாதிகள் என அனைத்து வகையிலான இடது சாரிகள் என்ற முறையற்ற கள்ளக் குழந்தைகளை பிரசவித்த அரக்க னாக இந்துத்துவாக்களால் அடையாளப்படுத்தப்படுகிறது.
"இந்துத்துவா சக்திகள் இட துசாரிகளுக்கு எதிராக இத்தகு காஷ்ப்புணர்ச்சியை வெளிப்படுத் தக் காரணம், அவர்கள் கல்வி, இதழியல் உள்ளிட்ட இந்தியா வின் முக்கிய அமைப்பு முறைக ளில் ஊடுறுவி அதைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதும், ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு அத்தியாகத்திலும், இந்துக்கள் பெருமை கொள்ளத் தக்க ஒவ்வொரு முன்னோடிக ளையும் இந்துக்களின் கதாநாய கர்களையும் அவர்கள் ஏளனப்ப டுத்தி வருவதால்தான்' என்கிறார் "டூ சர்க்கிள்ஸ்' என்ற இணையதள செய்தி ஊடகத்தின் ரியாஸ்.
மார்க்சிஸம் எப்போதும் முஸ் லிம்களின் பக்கம் நிற்கிறார். அவர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது என் றும் குற்றப்படுத்துகிறது சங்பரி வாரம்!
"இதே இடதுசாரிகள் இரத்த தாகம் கொண்ட இஸ்லாமிய வர லாறு மற்றும் அதன் வெறுக்கத் தக்க சர்வாதிகாரம் ஆகியவற்றை மூடி மறைக்கின்றன. அவர்களின் குற்றங்களை மன்னிக்கின்றன...'' என்றும், இடதுசாரிகள், முஸ் லிம்கள் எப்போதும் மதச்சார்பற் றவாதிகள் எனவும் இந்துக்கள் எப்போதுமே வகுப்புவாதிகள் எனவும் ஒரு கொடூரமான கரு த்தை உருவாக்குகின்றன...'' என் றும் இடது சாரிகள் மீது அவ தூறு அம்புகளை எய்கிறது இந்த பிரசுரம்.
இந்துத்துவா சக்திகளுக்கு தீங் கிழைப்பதாக அவை பிரஸ்தா பிக்கின்ற 5ங களில் முஸ்லிம்க ளின் பயங்கரவாதம் என்ற 'M' "இஸ்லாமிய விஷம் தோய்ந்த கனி' என வர்ணிக்கப்பட்டுள்ளது.
"முஸ்லிம் ஆளை மூளைச் சலவை செய்து, பிளாக்மெயில் செய்து, பயமுறுத்தி, வலுக்கட் டாயமாக ஜிஹாதிசம் என்ற வட் டத்திற்குள் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது இஸ்லாம்! 
இன்னொருபுறம் இந்து சமூ கத்தை நடுநிலைப்படுத்த, முடக்க, அவமானப்படுத்த அது கடுமை யாக உழைக்கிறது. இதன் மூலம் இஸ்லாத்தின் முன்னேற்றத்திற் கான பாதையை அது தெளிவாக் கிக் கொள்கிறது...'' என்று கூறுகி றது இந்தப் பிரசுரம். இதன் மூலம் இஸ்லாம் பற்றி ஒரு கொடூரத்தன மான சிந்தனையை பொதுவான இந்து சமுதாயத்தின் மத்தியில் விதைக்க முற்படுகின்றன சங்பரி வாரங்கள்.

"இந்து தேசியம் வெளிப்படுவ தைத் தோற்கடிக்க, கிடைக்கின்ற அத்தனை தளங்களும் பயன்ப டுத்தப்படுகின்றன. இந்தியாவின் பன்முக இனம், பன்முக கலாச்சா ரம், பன்முகத்தன்மை கொண்ட மொழி, பல்சமயக் கொள்கை, பன்முகக் கலாச்சார பண்பாடுகள் மூலம் இது நிகழ்கிறது...'' என்றும் குறிப்பிடும் இந்த பிரசுரம்,
"இஸ்லாத்துடனான யுத்தம் என்பது வரலாற்றில் மிக நீண்ட ஒன்றாக இருக்கும் என்று அறி விக்கிறது. இஸ்லாம் சீத்திருத்தப் பட முடியும் என்பது போன்ற பைத்தியக்காரத்தனமான யோசனை ஒரு வாதமாகவே இருக்கிறது...'' என்றும் அது குறிப் பிட்டுள்ளது.இதேபோன்ற வார்த்தை கள் கிறிஸ்தவ மிஷனரிகளைக் குறித் தும் அந்தப் பிரசுரத்தில் கூறப் பட்டுள்ளன. கிழக்கில் கிறிஸ்த வர்களின் பாதுகாப்பான புகலி டத்தை உருவாக்க அவர்கள் கடின முயற்சிகளில் ஈடுபட்டு வரு கின்றனர் என்றும், மேற்கத்திய இந்தியர்கள் மெக்காலேயிஸ்டு கள் என்று ஏளனம் செய்யப்படு கின்றனர்; மெக்காலேயன் கல்வி முறை தனது பரம் பரிய பெரு மையை பேச முடியாத இந்தியர் களை (இந்துக்களை) உருவாக்கி யிருக்கிறது என்றும், பொருள் முதல்வாதிகள் தனது சொந்த சமூகத்தின் மதிப்புமுறைக்கு எதி ராக தனிநபரை மோத விடுகிறார் கள் என்றும் இந்த பிரசுரம் சுட் டிக்காட்டுகிறது.
முதன் முறையாக மூன்று நாட் கள் நடந்த உலக இந்து காங்கி ரஸ் மாநாடு 2014ஐ உலக இந்து நிறுவனம் ஏற்பாடு செய்து நடத் தியுள்ளது. இதில் 40 நாடுகளிலி ருந்து 1500 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட் டிற்கு இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் பல ஸ்பான்ஸர் செய்திருக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ். எஸ்., வி.ஹெச்.பி. உள்ளிட்ட இந் துத்துவாவின் பல்வேறு அமைப் புகளின் தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த மாநாட்டின் 45க்கும் மேற்பட்ட அமர்வுகளில் பேச, கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், பல்வேறு துறைகளின் நிபுணர் கள் போன்றோர் அழைக்கப்பட் டுள்ளனர்.
நிகழ்ச்சியின் தொடக்க விழா வில் கலந்து கொண்டு பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலை வர் அசோக் சிங்கால், 800 ஆண்டு களுக்குப் பின்னர் டெல்லியின் ஆட்சி அதிகாரத்திற்கு பெருமை மிக்க இந்து (மோடி) பிருதி விராஜுக்குப் பின் மீண்டும் வந் திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

5M களை வைத்து இந்துத்து வாக்கள் பிரச்சாரம் செய்து வரும் வேளையில், இந்துத்துவாவை எதிர்கொள்ள நாம் இதுபோன்று ஙகளைத் தேட வேண்டிய தில்லை. "சங்பரிவாரம்' யாரை யெல்லாம் நல்லவர்கள் என்கி றதோ அவர்கள் கெட்டவர்கள். யாரையெல்லாம் அது கெட்ட வர்கள் என்கிறதோ அவர்கள் நல்லவர்கள். யாரை எல்லாம் அது எதிர்க்கிறதோ அவர்களை நாம் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க வேண்டும். யாரையெல் லாம் அது ஆதரிக்கிறதோ அவர் களை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்க வேண்டும். இந்த அளவு கோலை அனைவருக்கும் சொல் லிக் கொடுக்க வேண்டும்.
படங்கள்:உலக ஹிந்து காங்கிரஸ் மாநாட்டு மேடை மற்றும் அந்த பிரசுரங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக